போளூர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகரங்களில் இது 4வது பெரிய நகரமாகும். / From Wikipedia, the free encyclopedia
போளூர் (ஆங்கிலம்: Polur) இந்திய நாடு, தமிழ்நாடு மாநிலமான, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி துணை மாவட்டத்தில் உள்ள, போளூர் வட்டம், போளூர் ஊராட்சி ஒன்றியம், போளூர் (சட்டமன்றத் தொகுதி) ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் நகர நிர்வாக வசதிக்காக 18 பேரூராட்சி உறுப்பினர்களுடன் கூடிய சிறப்பு நிலை பேரூராட்சியும் அமைந்துள்ளது. இது ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.
போளூர்
POLUR | |
---|---|
சிறப்பு நிலை பேரூராட்சி | |
ஆள்கூறுகள்: 12.5°N 79.13°E / 12.5; 79.13 | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மாகாணம் | தொண்டை நாடு |
வருவாய் கோட்டம் | ஆரணி |
சட்டமன்றத் தொகுதி | போளூர் (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி | ஆரணி மக்களவைத் தொகுதி |
தோற்றுவித்தவர் | தமிழ்நாடு அரசு |
அரசு | |
• வகை | சிறப்பு நிலை பேரூராட்சி |
• நிர்வாகம் | போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி |
• வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் | ஆரணி |
• மக்களவை உறுப்பினர் | திரு.எம்.கே. விஷ்ணுபிரசாத் |
• சட்டமன்ற உறுப்பினர் | திரு. அக்ரி கிருஷ்ணமூர்த்தி |
• மாவட்ட ஆட்சியர் | திரு கே.எஸ். கந்தசாமி, இ.ஆ.ப. |
பரப்பளவு | |
• மொத்தம் | 12.58 km2 (4.86 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | மீட்டர்கள் |
ஏற்றம் | 173 m (568 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 55,278 |
இனம் | போளூர்காரன் |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீடு | 606 803 |
இந்தியாவில் தொலைபேசி எண்கள் | 04181 |
வாகனப் பதிவு | TN 97 |
சென்னையிலிருந்து தொலைவு | 172 கி.மீ. (107 மைல்) |
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 38 கி.மீ. (24 மைல்) |
வேலூரிலிருந்து தொலைவு | 53 கி.மீ. (33 மைல்) |
ஆரணியிலிருந்து தொலைவு | 29 கி.மீ. (18 மைல்) |
வந்தவாசியிலிருந்து தொலைவு | 58 கி.மீ. (36 மைல்) |
சித்தூரிலிருந்து தொலைவு | 89 கி.மீ. (55 மைல்) |
கடலூரிலிருந்து தொலைவு | 139 கி.மீ. (86 மைல்) |
இணையதளம் | போளூர் சிறப்பு நிலை பேரூராட்சி |
இந்த நகரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு விவசாயம் முக்கிய பிரதானத் தொழிலாக உள்ளது. இந்த நகரம் ஆரணி - செங்கம் மாநில நெடுஞ்சாலை SH237 மற்றும் வேலூர் - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை NH38 மற்றும் போளூர் - வந்தவாசி - செய்யூர் SH115 மாநில நெடுஞ்சாலை ஆகிய சாலைகளை இணைக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் ஆன்மீக நகரான திருவண்ணாமலைக்கும், பட்டு நகரான ஆரணிக்கும் அருகாமையில் அமைந்துள்ளது.