போளூர் (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
போளூர் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 66. இது ஆரணி மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. வந்தவாசி, கலசப்பாக்கம், கீழ்பெண்ணாத்தூர், ஆரணி, செஞ்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.இந்த தொகுதியை பொறுத்தவரை வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 30 சதவீதமும், ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 25 சதவீதமும், இதர பிரிவினர் 45 சதவீதமும் உள்ளனர்.[2]
விரைவான உண்மைகள் போளூர், தொகுதி விவரங்கள் ...
போளூர் | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மக்களவைத் தொகுதி | ஆரணி |
நிறுவப்பட்டது | 1951-நடப்பு |
மொத்த வாக்காளர்கள் | 2,43,921[1] |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் அக்ரி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி | |
கட்சி | அதிமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
மூடு
இங்கு விவசாயம், நெசவு தொழில் அதிகளவில் உள்ளன. போளூர் பகுதியில் மாம்பட்டு, எழுவாம்பாடி, வில்வாரணி, ஒண்ணுபுரம், அல்லியாளமங்களம் போன்ற கிராமங்களில் நெசவு தொழில் உள்ளது. இங்கு தயாரிக்கும் வேட்டி, சேலை, லுங்கிகள் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன.