செஞ்சி
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
செஞ்சி (Senji), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி வட்டம் மற்றும் செஞ்சி ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இது செஞ்சி சட்டமன்றத் தொகுதிக்கும்), ஆரணி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
விரைவான உண்மைகள் செஞ்சி GINGEE, நாடு ...
செஞ்சி
GINGEE | |
---|---|
சிறப்பு நிலை பேரூராட்சி | |
![]() | |
அடைபெயர்(கள்): செஞ்சிக் கோட்டை நகரம் | |
ஆள்கூறுகள்: 12.2522697°N 79.4188343°E / 12.2522697; 79.4188343 | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | விழுப்புரம் |
மண்டலம் | தொண்டை மண்டலம் |
சட்டமன்றத் தொகுதி | செஞ்சி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி | ஆரணி மக்களவைத் தொகுதி |
தோற்றுவித்தவர் | தமிழ்நாடு அரசு |
அரசு | |
• வகை | சிறப்பு நிலை பேரூராட்சி |
• நிர்வாகம் | பேரூராட்சி |
• மக்களவை உறுப்பினர் | திரு. எம். கே. விஷ்ணுபிரசாத் |
• சட்டமன்ற உறுப்பினர் | திரு. கே.எஸ்.மஸ்தான் |
• மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் பழனி, இ.ஆ.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 11.66 km2 (4.50 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 211 மீட்டர்கள் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 27,045 |
• அடர்த்தி | 2,300/km2 (6,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீடு | 04175 |
இந்தியாவில் தொலைபேசி எண்கள் | 604 202 |
வாகனப் பதிவு | TN 16 & TN 32 |
ஊராட்சி ஒன்றியம் | செஞ்சி |
சென்னையிலிருந்து தொலைவு | 155 கி.மீ |
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 40 கி.மீ |
விழுப்புரத்திலிருந்து தொலைவு | 40 கி.மீ |
ஆரணியிலிருந்து தொலைவு | 54 கிமீ |
திண்டிவனத்திலிருந்து தொலைவு | 28 கிமீ |
பெங்களூரிலிருந்து தொலைவு | 244 கிமீ |
புதுச்சேரியிலிருந்து தொலைவு | 67 கிமீ |
மூடு
சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது.[2]
இப்பேருராட்சியின் சிறப்பம்சமாக வரலாற்று புகழ்மிக்க தேசிங்கு ராஜா ஆட்சிப்புரிந்த செஞ்சிக் கோட்டை உள்ளது. இப்பேருராட்சி ஒரு சுற்றுலா தலமாகும். இது புதுச்சேரி - திருவண்ணாமலை - பெங்களூரு நெடுஞ்சாலை மற்றும் சென்னை நெடுஞ்சாலை மற்றும் விழுப்புரம் - ஆற்காடு, நெடுஞ்சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இப்பேருராட்சியை சுற்றி சுமார் 60 கிராமங்கள் உள்ளன.