![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/05/%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%259E%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D_%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588_%25E0%25AE%2587%25E0%25AE%25B4%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AF%2588%25E0%25AE%25AA%25E0%25AF%258D_%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg/640px-%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%259E%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AE%25BF%25E0%25AE%2595%25E0%25AF%258D_%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588_%25E0%25AE%2587%25E0%25AE%25B4%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AF%2588%25E0%25AE%25AA%25E0%25AF%258D_%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg&w=640&q=50)
செஞ்சிக் கோட்டை
From Wikipedia, the free encyclopedia
செஞ்சிக் கோட்டை (Gingee Fort, Senji Fort) (இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள் ஒன்றாகும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இது யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாஜி, "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர். முகலாயர்களால் பாதுஷாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது.
செஞ்சிக் கோட்டை Gingee Fort | |
---|---|
பகுதி: தமிழ்நாடு | |
விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா | |
![]() | |
ஆள்கூறுகள் | (12.2639°N 79.0444°E / 12.2639; 79.0444) |
வகை | கோட்டைகள் |
இடத் தகவல் | |
கட்டுப்படுத்துவது | தமிழ்நாடு அரசு |
நிலைமை | சிதைந்தவை |
இட வரலாறு | |
கட்டிய காலம் | 12ம், 13ம் நூற்றாண்டு |
கட்டியவர் | ஆனந்த கோன் கி.பி. 1190–1240
கிருஷ்ணா கோன் 1240–1270 கோனேரி கோன் கோவிந்த கோன் வலிய கோன் அல்லது புலிய கோன் 1300 |
கட்டிடப் பொருள் |
கருங்கல் (பாறை) பாறைகள்]], சுண்ணக் கலவை |
நிகழ்வுகள் | தேசிய நினைவுச் சின்னம் (1921) |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/05/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.jpg/640px-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.jpg)
இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைந்தது முக்கோண வடிவமாக அமைந்துள்ளது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.