ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)
பட்டு மற்றும் அரிசி ஆலைகளுக்கு புகழ்ப்பெற்ற நகரம். திருவண்ணாமலை மாவட்டத்தின் இரண்டாவது பெரி / From Wikipedia, the free encyclopedia
ஆரணி (ஆங்கிலம்: Arani) தென் இந்தியா மாநிலமான தமிழ்நாட்டை சேர்ந்த நகராட்சியும் மற்றும் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்ட வட மாவட்டத்தின் ஒரு பகுதியான திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கூடிய தேர்வு நிலை நகராட்சி ஆகும். இவ்வூர் பட்டுப்புடவைகளுக்கும், பொன்னி ரக அரிசி வகைகளுக்கும் பெயர்பெற்றது. இந்த ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆரணி மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 22.03.2021 ஆம் தேதி நடந்த தேர்தல் பரப்புரையில் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆரணி தலைமையில் புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.[2].
ஆரணி | |
---|---|
, | |
அடைபெயர்(கள்): தமிழ்நாட்டின் அரிசி நகரம், இந்தியாவின் பட்டு நகரம் | |
ஆள்கூறுகள்: 12.671300°N 79.281800°E / 12.671300; 79.281800 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
மாகாணம் | தொண்டை நாடு |
சட்டமன்றத் தொகுதி | ஆரணி (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி | ஆரணி மக்களவைத் தொகுதி |
முதலமைச்சர் | திரு.மு.க.ஸ்டாலின் |
தோற்றுவித்தவர் | தமிழ்நாடு அரசு |
அரசு | |
• வகை | தேர்வு நிலை நகராட்சி |
• நிர்வாகம் | ஆரணி நகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | திரு.எம்.எஸ்.தரணிவேந்தன் |
• சட்டமன்ற உறுப்பினர் | திரு.சேவூர்.இராமச்சந்திரன் |
• மாவட்ட ஆட்சியர் | திரு.முருகேஷ் இ.ஆ.ப |
• சார் ஆட்சியர் | திருமதி.தனலட்சுமி இ.ஆ.ப. |
• நகராட்சி தலைவர் | திரு.ஏ.சி.மணி |
பரப்பளவு | |
• தேர்வு நிலை நகராட்சி | 35.64 km2 (13.76 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 151 மீட்டர்கள் |
ஏற்றம் | 171 m (561 ft) |
மக்கள்தொகை (2011) | |
• தேர்வு நிலை நகராட்சி | 92,375 |
• தரவரிசை | 39 |
• நகர்ப்புறம் | 1,19,574 |
• நாட்டுப்புறம் | 1,75,402 |
இனம் | தமிழர்கள் |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீடு | 632 301, 632 314, 632 316, 632 317, 632 318 |
இந்தியாவில் தொலைபேசி எண்கள் | 04173 |
வாகனப் பதிவு | TN-97 |
சென்னையிலிருந்து தொலைவு | 141 கி.மீ (88 மைல்) |
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு | 62 கி.மீ (40 மைல்) |
வேலூரிலிருந்து தொலைவு | 36 கி.மீ (24 மைல்) |
காஞ்சிபுரத்திலிருந்து தொலைவு | 62 கி.மீ (40 மைல்) |
விழுப்புரத்திலிருந்து தொலைவு | 92 கி.மீ (58 மைல்) |
புதுச்சேரியிலிருந்து தொலைவு | 120 கிமீ (75 மைல்) |
பெங்களூரிலிருந்து தொலைவு | 241 கிமீ (150 மைல்) |
இணையதளம் | ஆரணி நகராட்சி |
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி இரண்டாவது பெரிய நகரமாகும். கமண்டல நாகநதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்திற்க்கு அடுத்தப்படியாக நெசவு தொழில் பட்டுப்புடவைகளுக்கும் மற்றும் தஞ்சாவூருக்கு அடுத்தப்படியாக பொன்னி ரக அரிசி வகைகளுக்கும் பெயர் பெற்றதாகும். ஆரணி பட்டுப்புடவைகளுக்கும் மற்றும் அரிசி வகைகளுக்கும் பெயர் பெற்றிருப்பதனால் ஆரணி நகரை இந்தியாவின் பட்டு நகரம் என்றும், தமிழ்நாட்டின் அரிசி நகரம் என்றும் இரு பெயர்களை கொண்டு அழைக்கப்படுகிறது. ஆரணி பட்டு சேலையானது, புவிசார் குறியீடு பெற்று தேசிய விருதும் பெற்றுள்ளது. அதேபோல் ஆரணி அரிசிக்கும் தேசிய விருது பெற்றுள்ளது. இங்கு வரலாற்று சிறப்புமிக்க புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம், கைலாசநாதர் ஆலயம், எந்திர வடிவில் சனீஸ்வர பகவான் ஆலயம், அருள்மிகு பச்சையம்மன் ஆலயம், பெரியநாயகி அம்மன் ஆலயம், ஸ்ரீவேம்புலியம்மன் ஆலயம், அமிர்தாம்பிகை உடனுறை சந்திரசேகரேஸ்வரர் ஆலயம் ஆகிய கோவில்கள் அமையப்பெற்று கோவில்களின் நகரம் எனும் போற்றப்படும் அளவிற்கு கோவில்கள் உள்ளதாக கருதப்படுகிறது.