ஆரணி வருவாய் கோட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டம் / From Wikipedia, the free encyclopedia
ஆரணி வருவாய் கோட்டம் (ஆங்கிலம்:Arani Revenue Devision) இந்திய நாட்டில், தமிழ்நாட்டிலுள்ள, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மூன்று வருவாய் கோட்டங்களில் ஒன்றாகும். இந்த வருவாய் கோட்டத்தை 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஆரணி வருவாய் கோட்டம் ஆகும். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் ஆரணியில் அமைந்துள்ளது.
ஆரணி | |
துணை மாவட்டம் | |
சம்புவராயர் மாவட்டம் | |
ஆரணி மாவட்டம்: திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் |
திருவண்ணாமலை |
தலைநகரம் |
ஆரணி |
பகுதி | வட மாவட்டம் |
ஆட்சியர் |
திரு. முருகேஷ், இ. ஆ. ப |
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
திரு. அ. பவன் குமார் ரெட்டி, இ. கா. ப |
துணை ஆட்சியர் | திருமதி.தனலட்சுமி இ.ஆ.ப |
காவல்துறை துணை கண்காணிப்பாளர் | திரு.கோட்டீஸ்வரன் இ.கா.ப |
நகராட்சிகள் | 1 |
வருவாய் கோட்டங்கள் | 1 |
வட்டங்கள் | 4 |
பேரூராட்சிகள் | 3 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 6 |
ஊராட்சிகள் | 260 |
வருவாய் கிராமங்கள் | 295 |
சட்டமன்றத் தொகுதிகள் | ஆரணி, போளூர், கலசப்பாக்கம் |
மக்களவைத் தொகுதிகள் | ஆரணி |
பரப்பளவு | 1440.06 ச.கி.மீ |
மக்கள் தொகை |
7,87,656 (2011) |
அலுவல் மொழி(கள்) |
தமிழ் |
நேர வலயம் |
இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு |
632301 |
தொலைபேசிக் குறியீடு |
04173 |
வாகனப் பதிவு |
TN-97 |
பாலின விகிதம் |
989 ♂/♀ |
கல்வியறிவு |
74.21% |
இணையதளம் | Arani [தொடர்பிழந்த இணைப்பு] |
வருவாய் நிர்வாக வசதிக்காக திருவண்ணாமலை வருவாய் கோட்டம் மற்றும் செய்யாறு வருவாய் கோட்டம் ஆகிய வருவாய் கோட்டங்களை மறுசீரமைத்து புதிதாக ஆரணி வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது. இந்த வருவாய் கோட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேவூர் ராமச்சந்திரன் அவர்களின் முயற்சியால் முதலமைச்சர் திரு. எடப்பாடி க. பழனிசாமிஅவர்களால் ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.