மெய்யெழுத்து
From Wikipedia, the free encyclopedia
பிறப்பொலியியலில் (articulatory phonetics), மெய்யொலி (Consonant) என்பது, பேச்சு மொழியின் ஒரு ஒலிவகை ஆகும். நெஞ்சிலிருந்து வரும் காற்று வாய்ப்பகுதியில் தற்காலிகமாகத் தடைப்பட்டு வெளியேறும்போது மெய்யொலிகள் உருவாகின்றன. மெய்யொலிகள்,
- அடைப்பொலி,
- மூக்கொலி,
- உரசொலி,
- மருங்கொலி,
- ஆடொலி,
- வருடொலி,
- தொடரொலி
எனப் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
தமிழ் அரிச்சுவடியில் க் தொடங்கி ன் வரையுள்ள 18 எழுத்துகளும் மெய்யெழுத்துகள் (consonant) எனப்படுகின்றன.[1] இவை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[2] வல்லொலிகளைக் கொண்ட மெய்யெழுத்துகள், வல்லினத்தையும் மெல்லொலிகளைக் கொண்டவை மெல்லினத்தையும் இவ்விரண்டுவகை ஒலிகளுக்கும் இடைப்பட்ட ஏனையவை இடையினத்தையும் சார்ந்தவை.[3]
மெய்யெழுத்துகள், உயிரெழுத்துகளுடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகளை உருவாக்குகின்றன.[7]
சொற்களில் மெய்யெழுத்துகளின் பயன்பாட்டுக்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:-
எழுத்து | பெயர் | பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி ஒலிப்பு | சொல் |
---|---|---|---|
க் | ககரமெய் | k | பக்கம் |
ங் | ஙகரமெய் | ŋ | தங்கம் |
ச் | சகரமெய் | tʃ | பச்சை |
ஞ் | ஞகரமெய் | ɲ | பஞ்சு |
ட் | டகரமெய் | ɽ | பட்டு |
ண் | ணகரமெய் | ɳ | கண் |
த் | தகரமெய் | t̪ | பத்து |
ந் | நகரமெய் | n̪ | பந்து |
ப் | பகரமெய் | p | உப்பு |
ம் | மகரமெய் | m | அம்பு |
ய் | யகரமெய் | j | மெய் |
ர் | ரகரமெய் | ɾ̪ | பார் |
ல் | லகரமெய் | l̪ | கல்வி |
வ் | வகரமெய் | ʋ | கவ்வு |
ழ் | ழகரமெய் | ɻ | வாழ்வு |
ள் | ளகரமெய் | ɭ | உள்ளம் |
ற் | றகரமெய் | r | வெற்றி |
ன் | னகரமெய் | n | அன்பு |
தற்காலத்தில், க்ஷ், ஜ், ஸ், ஷ், ஹ் ஆகிய கிரந்த மெய்யெழுத்துகளும் தமிழ் உரைநடையில் பயன்படுத்தப்படுவதுண்டு. சொற்களில் அவற்றின் பயன்பாட்டுக்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:-