கிரந்த எழுத்துமுறை
From Wikipedia, the free encyclopedia
கிரந்தம் (வடமொழி ग्रन्थ - புத்தகம்) என்பது வடமொழியினை எழுத தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வந்த ஓர் எழுத்து முறையாகும்[2] (இலிபி). இந்திய மொழியான மலையாளத்தின் எழுத்து முறையும் கிரந்தத்தில் இருந்து தோன்றியது ஆகும். மேலும் கிரந்த எழுத்துமுறை பருமிய மொழி, தாய் மொழி, சிங்களம் முதலிய தென்-கிழக்காசிய மொழிகளின் எழுத்து முறை தோற்றத்திலும் முக்கிய பங்கு வகித்துள்ளது.[3]. பல்லவர்கள் பயன்படுத்திய கிரந்த எழுத்துமுறை பல்லவ கிரந்தம் என அழைக்கப்படுகிறது. இதை பல்லவ எழுத்துமுறை எனவும் குறிப்பிடுவர். இந்த பல்லவ கிரந்த எழுத்துமுறையைச் சார்ந்தே தென்கிழக்காசிய மொழிகள் எழுத்துமுறையை பெற்றன.
கிரந்தம் | |
---|---|
கிரந்த உயிர்மெய் கூட்டெழுத்துக்கள்.('க', 'ங', 'ச'... வரிசை) | |
எழுத்து முறை வகை | |
காலக்கட்டம் | கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நுற்றாண்டு வரை[1] |
திசை | Left-to-right |
மொழிகள் | சமசுகிருதம், மணிப்பிரவாளம் |
தொடர்புடைய எழுத்து முறைகள் | |
மூல முறைகள் | பிராமி
|
தோற்றுவித்த முறைகள் | மலையாள எழுத்துமுறை, துளு எழுத்துமுறை |
நெருக்கமான முறைகள் | வட்டெழுத்து |
சீ.அ.நி 15924 | |
சீ.அ.நி 15924 | Gran (343), Grantha |
ஒருங்குறி | |
ஒருங்குறி மாற்றுப்பெயர் | Grantha |
இந்தக் கட்டுரையில் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிகளில் (IPA) ஒலிப்பியல் படியெடுத்தல்கள் உள்ளன. IPA குறியீடுகள் பற்றிய அறிமுக வழிகாட்டிக்கு, உதவி:IPA பார்க்கவும். [ ], / / and ⟨ ⟩ இடையே உள்ள வேறுபாட்டிற்கு, ப.ஒ.அ.§அடைப்புக்குறிகள் மற்றும் படியெடுத்தல் பிரிப்பான்களை பார்க்கவும். |
கிரந்த எழுத்துகள் தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் சமசுகிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். தற்காலத்தில் தேவநாகரி எழுத்துகள் புகழடைந்ததால் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழ் நாட்டில் சில பத்தாண்டுகளுக்கு முன் தொடங்கிய சமற்கிருதத்துக்கு எதிரான இயக்கங்களால், பொதுவான சமசுகிருதத்தின் பயன்பாடு வெகுவாகக் குறைந்ததும் இதற்கு ஒரு காரணமெனலாம்.