வடமொழி
From Wikipedia, the free encyclopedia
வடமொழி என்பது பிராகிருதத் (Prakrits) திரிபுகளாகிய வடபுல இயல் மொழிகளாகிய அவப்பிரஞ்சனங்களுக்கு[1] (Apabhramsa) கொடுக்கப்பட்ட பொதுப்பெயர். பிராகிருதம் பாகதம் எனவும், சமற்கிருதம் சங்கதம் என்றும் வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளன. என்றும் தமிழகத்திற்கு வடக்கில் இவை பேசப்பட்டதால் அவப்பிரஞ்சனங்களை வடமொழி என்று தமிழில் பொதுவாகக் குறித்தனர். தொல்காப்பிய உரை ஆசிரியர்களுள் ஒருவரான தெய்வச்சிலையார் தொல்காப்பியத்தில் குறிக்கப்படும் வடசொல்லுக்கு உரை எழுதுகையில் பாகத மொழிகளை வடசொல்லுக்குரிய மொழிகள் என வலியுறுத்துகிறார்.[2] இன்னும் சில ஆய்வாளர்கள் தொல்காப்பியம் கூறும் வடசொல் என்பது பாகத மொழிகளையே குறிக்கும் எனவும் கூறியுள்ளனர்.[3]
தொல்காப்பிய உரையாசிரியர்களில் மற்றொருவரான இளம்பூரணரும், நன்னூல் உரையாசிரியர்களும் தமிழ் பேசப்பட்ட நிலத்தை அடிப்படையாக அமைத்துப் பாகுபடுத்தப்பட்டுள்ள நான்கு வகைப்பட்ட சொற்களில் ஒன்றான வடசொல்லுக்கு இலக்கணம் கூறும்போது ஆரிய மொழி என்றும், அதனைக் குறிக்கும் மற்றொரு சொல்லாக வடமொழி என்றும் குறிப்பிட்டு விளக்கம் கண்டுள்ளனர்.[4] ஆரியர் பேசிய மொழி ஆரியம். அதன் சொல் தமிழில் கலக்கும்போது அந்தச் சொல் தமிழருக்கு வடமொழி.[5][6][7] ஆரியம் பேசும் மக்களுக்கு அவர்கள் குறியீட்டின்படி சமசுகிருதம்.[சான்று தேவை] ஆரியம் என்றாலோ, வடமொழி என்றாலோ அது பாணினி இலக்கணம் எழுதிய சமற்கிருதத்தைக் குறிக்காது.[சான்று தேவை] அவருக்கு முன்பு ஆரியர்களால் பேசப்பட்டதும், 'ஐந்திரம்' முதலான இலக்கண நூல்களைக் கொண்டிருந்ததுமான வேத கால மொழியை உணர்த்தும்.[சான்று தேவை]