![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/58/Tamil-alphabet-%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%25A3%25E0%25AF%258D.svg/langta-640px-Tamil-alphabet-%25E0%25AE%25A3%25E0%25AF%258D%25E0%25AE%25A3%25E0%25AF%258D.svg.png&w=640&q=50)
ண்
247 தமிழ் எழுத்துக்களில், 18 மெய்யெழுத்துக்களுள், மெல்லின மெய்யெழுத்துக்கள் ஆறில் ஒன்று. / From Wikipedia, the free encyclopedia
ண் (ண்ⓘ) தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் பத்தொன்பதாவது எழுத்து. இது மொழியின் ஓர் ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "ணகர மெய்" அல்லது "ணகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும் பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இண்ணன்னா" என வழங்குவர். ண், ன் ஆகிய எழுத்துகளிடையே ஒலிப்பு வேறுபாடுகள் உள்ளனவாயினும் பலர் இவற்றை வேறுபடுத்தி ஒலிப்பதில்லை. எழுதுவதிலும் சில சமயங்களில் சில மாணவர்கள் குழப்பம் அடைவது உண்டு. இதனால் இவற்றை வேறுபடுத்திச் சொல்வதற்காக இரண்டு சுழி நானா, மூன்றுசுழி ணானா என்று கூடுதல் விளக்கத்துடன் சொல்லும் வழக்கமும் உண்டு.