![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/af/Tamil-alphabet-%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A8%25E0%25AF%258D.svg/langta-640px-Tamil-alphabet-%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A8%25E0%25AF%258D.svg.png&w=640&q=50)
ந்
247 தமிழ் எழுத்துக்களில், 18 மெய்யெழுத்துக்களுள், மெல்லின மெய்யெழுத்துக்கள் ஆறில் ஒன்று. / From Wikipedia, the free encyclopedia
ந் (ந்ⓘ) தமிழ் மொழியின் எழுத்துகளில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் இருபத்தோராவது எழுத்து. இது மொழியின் ஓர் ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை "நகர மெய்" அல்லது "நகர ஒற்று" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்து கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை "இந்தன்னா" என வழங்குவர். தனி மெய்களாக நிற்கும்போது ந், ன் என்பவற்றிடையே ஒலிப்பு வேறுபாடு தெளிவாக உள்ளது. எனினும் இவ்விரண்டு எழுத்துகளுடனும் உயிர்கள் சேர்ந்து உருவாகும் இவ்வெழுத்துகளின் ஒத்த உயிர்மெய்களிடையே ஒலிப்பு வேறுபாடு இல்லை. இதனால் இவ்விரு எழுத்துகளையும் முறையே நகரம், என்றும் னகரம் என்றும் எழுத்தில் வேறுபாடு காட்ட முடிந்தாலும், சொல்லும்போது ஒலிப்பு வேறுபாடு இருக்காது. இதனால் இவற்றை வேறுபடுத்திக் குறிப்பிட வேண்டியபோது அவற்றுக்கு முன்வரும் எழுத்துகளைக் குறித்து ன் ஐ றன்னகரம்(ற+னகரம்-றகரத்தை அடுத்து வரும் னகரம் என்றும் ந் ஐத் தந்நகரம்(த+நகரம்-தகரத்தை அடுத்து வரும் நகரம்) என்றும் குறிப்பிடப்படுவது வழக்கம்.