நா. சந்திரபாபு நாயுடு
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
நாரா சந்திரபாபு நாயுடு (தெலுங்கு: నారా చంద్రబాబు నాయుడు, பி. ஏப்ரல் 20, 1950), ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சரும் ஆவார்.[2][3] 1995 முதல் 2004 வரையும்,2014 முதல் 2019 வரையும் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். இவரே கூடுதலான நாட்கள் பதவியில் இருந்த ஆந்திர முதலமைச்சர் ஆவார்.[4] தற்போது தெலுங்கு தேசக் கட்சியின் தலைவராக உள்ளார். ஹெரிட்டேஜ் ஃபூட்ஸ் என்ற உணவு நிறுவனத்தை 1992 ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். 2014 இல் நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் தெலுங்கானாவை தவிர்த்து, ஆந்திரப் பிரதேசத்தின் ஏனைய பகுதிகளில் பெரும் வெற்றி பெற்றார். புதியதாக அமைக்கப்பட்ட சீமாந்திரா மாநிலத்தின் முதன்முதலில் முதல்வராகப் பதவியேற்றார்.
நாரா சந்திரபாபு நாயுடு | |
---|---|
![]() | |
13வது ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 12 சூன் 2024 | |
ஆளுநர் | எசு. அப்துல் நசீர் |
முன்னையவர் | ஜெகன் மோகன் ரெட்டி |
பதவியில் 8 சூன் 2014 – 23 மே 2019 | |
ஆளுநர் | ஈக்காடு சீனிவாசன் இலட்சுமி நரசிம்மன் |
முன்னையவர் | நல்லாரி கிரண் குமார் ரெட்டி (முன்னர் குடியரசுத் தலைவர் ஆட்சி) |
பின்னவர் | ஜெகன் மோகன் ரெட்டி |
பதவியில் 1 செப்டம்பர் 1995 – 13 மே 2004 | |
ஆளுநர் | கிருஷண் காந்த் கோபால ராமனுஜம் சக்ரவர்த்தி ரங்கராஜன் சுர்சித் சிங் பர்னாலா |
முன்னையவர் | என். டி. ராமராவ் |
பின்னவர் | எ. சா. ராஜசேகர் |
சட்ட மன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 1989 | |
முன்னையவர் | என். ரங்கசாமி நாயுடு |
தொகுதி | குப்பம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 20 ஏப்ரல் 1950 (1950-04-20) (அகவை 74) நாராவரிப்பள்ளி, சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி (1983-தற்போது வரை) இந்திய தேசிய காங்கிரசு (1983-வரை) |
துணைவர் | நாரா புவனேசுவரி |
பிள்ளைகள் | நாரா லோகேஷ் (மகன்) |
உறவினர்கள் | என். டி. ராமராவ் (மாமனார்) நந்தமூரி பாலகிருஷ்ணா புரந்தேசுவரி ஜூனியர் என்டிஆர் நந்தமூரி கல்யாண் ராம் தாரகா இரத்னா நாரா ரோகித் |
வாழிடம்(s) | ஜுபிலீ மலைகள், ஐதராபாத், இந்தியா |
முன்னாள் கல்லூரி | சிறீ வெங்கடேசுவரா பல்கலைக்கழகம்[1] |
இணையத்தளம் | Government Site Official Site |
இவர் முதலமைச்சராக பொறுப்பில் இருந்தபோது பிரித்தானியப் பிரதமர் டோனி பிளேர் மற்றும் அமெரிக்க குடியரசுத் தலைவர் பில் கிளின்டன் ஆகியோர் இவரை ஐதராபாத்தில் சந்தித்துள்ளனர். இந்தியா டுடே,தி எகனாமிக் டைம்ஸ்,டைம் (இதழ்) போன்ற இதழ்களின் ஆண்டுச் சிறப்பு விருதுகளையும் உலக பொருளாதார மன்றத்தின் கனவு அமைச்சரவையின் அங்கத்துவத்தையும் வென்றுள்ளார்.[5][6][7][8] தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தேசிய தகவல்தொழிற்நுட்பக் குழுவின் அவைத்தலைவராக பொறுப்பு வகித்துள்ளார்.[9][10]