![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4c/Pallava_kingdom_in_kalapirar_period.jpg/640px-Pallava_kingdom_in_kalapirar_period.jpg&w=640&q=50)
களப்பிரர்
From Wikipedia, the free encyclopedia
களப்பிரர் தென்னிந்தியாவை ஆண்ட அரசாளர்கள். இவர்கள் தமிழகத்தை ஏறக்குறைய பொ.ஊ. 250 – பொ.ஊ. 600 காலப்பகுதியில் ஆண்டார்கள் எனச் சொல்லப்படுகிறது. இவர்களின் தோற்றம், இவர்கள் யார் என்பது பற்றி தெளிவான தகவல்கள் இன்னும் இல்லை. எனினும் இவர்கள் காலத்தில் சைன சமயம், பௌத்த சமயம் தமிழகத்தில் சிறப்புற்று இருந்தது. இவர்கள் பாளி மொழியை ஆதரித்தாகவே தெரிகின்றது. எனினும், தமிழ் மொழியும் இலக்கியமும் வளர்ந்தது. இவர்களது ஆட்சிக் காலமும், இவர்களது கால தமிழ்ப் படைப்புகளும் பின்னர் வந்த சைவ அல்லது இந்து சமயத்தவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.[சான்று தேவை] இவர்களது காலம் தமிழகத்தின் இருண்ட காலம் என்று இன்றுவரை ஒரு கருத்து பரவலாக்கப்பட்டுள்ளது. களப்பிரர் ஆட்சிக்காலத்தை, கலை-இலக்கிய நோக்கிலும், அரசியல் நோக்கிலும் இருண்ட காலம் என்பர். என்றாலும், இவர்கள் ஆட்சியில் தாழிசை, துறை, விருத்தம் போன்ற புதிய பாவினங்களும்; அவிநயம், காக்கை பாடினியம், நத்தத்தம், பல்காப்பியம், பல்காப்பியப் புறனடை, பல்கயாம், போன்ற இலக்கண நூல்களும்; நரிவிருத்தம், சீவக சிந்தாமணி, எலி விருத்தம், கிளிவிருத்தம், விளக்கத்தார் கூத்து, பெருங்கதை போன்ற சமண சமய இலக்கியங்களும்; மூத்த திருப்பதிகங்கள், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி, கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி அற்புதத் திருவந்தாதி, திருஈங்கோய்மலை எழுபது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, திருஎழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப் பிரசாதம், காரெட்டு, கலிவெண்பா, திருக்கண்ணப்ப தேவர் திருமறம், இரட்டைமணி மாலை, திருவிரட்டை மணிமாலை, ஆகிய சைவ சமய நூல்களும் தோன்றின. இவற்றோடு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பான்மை நூல்கள் இவர்கள் காலத்தில் தோன்றியவைகளே ஆகும் என்று மயிலை சீனி. வேங்கடசாமி தமது களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்) நூலில் குறிப்பிடுகிறார்.[1] இதனால், களப்பிரர் காலம், இருட்டடிப்பு செய்யப்பட்டக் காலம் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.[2]
களப்பிரர் பேரரசு | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
250–600 | |||||||||||
![]() களப்பிரர் எல்லைகள் | |||||||||||
தலைநகரம் | காவிரிப்பூம்பட்டினம், மதுரை | ||||||||||
பேசப்படும் மொழிகள் | பிராகிருதம், தமிழ் | ||||||||||
சமயம் | பௌத்தம் இந்து சமயம் சைனம் | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
பேரரசர்[சான்று தேவை] | |||||||||||
• 5-ஆம் நூற்றாண்டு | அச்சுத விக்ராந்தன் | ||||||||||
• | பவத்திரியின் திரையன் | ||||||||||
• | வேங்கடத்தின் புல்லி திருப்பதி | ||||||||||
வரலாற்று சகாப்தம் | பழங்கால இந்தியா | ||||||||||
• 3-ஆம் நூற்றாண்டு | அண். 250 | ||||||||||
• 7-ஆம் நூற்றாண்டு | அண். 600 | ||||||||||
| |||||||||||
தற்போதைய பகுதிகள் | ![]() |