கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
From Wikipedia, the free encyclopedia
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்றான அந்தாதி வகையினது.
எழுதியவர் நக்கீரதேவ நாயனார்; காலம் 10-ஆம் நூற்றாண்டு. இதில் 100 வெண்பாக்கள் உள்ளன.
காளத்தியில் கைலையைக் கண்டவர் அப்பர். இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு தோன்றியது இந்த நூல். இந்தத் தொடுப்பில் கைலை பற்றி ஒரு பாடலும், காளத்தி பற்றி அடுத்த பாடலும் என மாறி மாறிப் பாடல்கள் அமைந்துள்ளன.