பதினோராம் திருமுறை என்பது சைவத் திருமுறை வைப்பினிலே காரைக்கால் அம்மையார் உட்பட் 12 அடியவர்கள் பாடிய பாடல்களை உள்ளடக்குகின்றது. இதில் நாற்பது பதிகங்கள் அடங்கியுள்ளன. இத் திருமுறை சைவப் பிரபந்த மாலை அல்லது சைவப் பிரபந்த திரட்டு என அழைக்கப்படுகின்றது.
கோயில் திருப்பண்ணியர் விருத்தம் - நம்பியாண்டார் நம்பி
ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம் - நம்பியாண்டார் நம்பி
திருவெண்பா வகை இலக்கியம்;(1)
சேத்திர வெண்பா - ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
பதிகம் பாடியவர்களில் பெண்பால் புலவரான காரைக்காலம்மையாரின் பதிகங்கள் இத் திருமுறையில் அடங்கியுள்ளது.
நக்கீரதேவர் 10 வகையான சிற்றிலக்கிய பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு அடுத்ததாக நம்பியாண்டார் நம்பி 9 வ்கையான சிற்றிலக்கிய வகை பாடல்களை பாடியுள்ளார்.
சிவனை மட்டுமின்றி முருகப்பெருமானை முதன்மைப்படுத்தி பாடப்பெற்ற திருமுருகாற்றுப்படை (நக்கீரதேவர்),மற்றும் விநாயகரை முதன்மைபடுத்தும் மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை (அதிராவடிகள்) என்பனவும் இத் திருமுறையில் அமையப்பெற்றுள்ளன.
திரு ஆலவாய் உடையார், கல்லாட தேவ நாயனார் ஆகியோர் ஒரே ஒரு பதிகம் மட்டும் பாடியுள்ளனர்.