காக்கை பாடினியம்
From Wikipedia, the free encyclopedia
காக்கை பாடினியம் செய்யுள் இலக்கணம் கூறும் ஓர் தமிழ் இலக்கண நூல். இந்த நூல் முழுமையான அளவில் தற்காலத்தில் கிடைக்கவில்லை. இலக்கண நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் இந்த நூலின் நூற்பாக்களை தம் கருத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் மேற்கோள்களாகக் காட்டியுள்ளனர். இந்த நூற்பாக்களையெல்லாம் தொகுத்து இதனை ஒரு தனி நூலாக அண்மையில் உருவாக்கியுள்ளனர். 89 நூற்பாக்கள் இதில் உள்ளன.
காக்கைபாடினியார் இயற்றிய நூல் காக்கைபாடினியம் எனப்பட்டது.
இந்த நூல் தோன்றிய காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டு என அறிஞர்கள் கருதுகின்றனர்.[மேற்கோள் தேவை]
அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி இந்த நூற்பாக்களைத் தொகுத்த முதல் நூலாசிரியர். இந்த நூலிலுள்ள நூற்பாக்களைத் தம் இலக்கண அறிவைக்கொண்டு வகைப்படுத்தி, நிரலாக்கி அறிஞர் இரா. இளங்குமரன் தற்போதுள்ள இதன் பதிப்பை வழங்கியுள்ளார்.[1]
இந்த நூலைத் திரட்டுவதற்கு உதவிய மூலநூல்கள்:
- தொல்காப்பிய உரைநூல்கள்
- நன்னூல் மயிலைநாதர் உரை
- இறையனார் களவியல் உரை
- வீரசோழிய உரை
- யாப்பருங்கலக் காரிகை உரை
- யாப்பருங்கல விருத்தியுரை
காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்பவர் சங்ககாலப் புலவர். காக்கை பாடினியம் பாடிய காக்கை பாடினியார் இந்த நச்செள்ளையார் அல்லர். காலத்தால் பிற்பட்டவர்.