பெருங்கதை
From Wikipedia, the free encyclopedia
குணாதித்தியர் என்பவரால் பிராகிருத மொழியின் வட்டார வழக்கு மொழியான பைசாசம் மொழியில் எழுதப்பட்ட பிரகத்கதை என்னும் இலக்கியத்தைத் தழுவி ஆக்கப்பட்டதே பெருங்கதை ஆகும். சோழர் காலத்தைச் சேர்ந்தது. இதை ஆக்கியவர் கொங்குவேளிர் என்பவராவார். இவர் ஒரு சமணர். கௌசாம்பி நாட்டு அரசனின் மகனான உதயணன் என்பவனின் கதையே இது.
விக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது: