கொங்குவேளிர்
கொங்கு நாட்டைச் சேர்ந்த சிற்றரசர்களுள் ஒருவர். / From Wikipedia, the free encyclopedia
கொங்குவேளிர் பெருங்கதையின் ஆசிரியர். கொங்கு நாட்டைச் சேர்ந்தவர்; வேளாள மரபில் பிறந்தவர். சிற்றரசர்களுள் ஒருவர்.[1] இவர் பிறந்த ஊர் கொங்கு நாட்டில் உள்ள விசயமங்கலம் என்று கூறுவர்.[2] இவர் தமிழ்ப் புலவர் பலரை ஒன்று சேர்த்து ஆய்வு செய்யும் அமைப்பை ஏற்படுத்தி இருந்தார். அடியார்க்கு நல்லார் என்னும் சிலப்பதிகார உரையாசிரியரின் கூற்றின்படி கொங்குவேளிர் காலத்தில் இடைச்சங்க நூல்கள் வழக்கத்தில் இருந்துள்ளதை அறிய முடிகின்றது. இவரும் இவரது காலத்துப் புலவர்களும் இடைச்சங்க நூல்களில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்ததும் தெரிய வருகின்றது.