பைசாசம்
From Wikipedia, the free encyclopedia
பைசாச மொழி (Paishachi (ப.ச.ரோ.அ: Paiśācī) பண்டைய இந்தியாவின் வடமேற்கு பகுதியில் (தற்கால ஆப்கானித்தான், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணம்) வாழ்ந்த பிசாசர்கள் எனும் இன மக்கள் பேசிய மொழி ஆகும். பைசாச மொழியானது பிராகிருத மொழியின் ஒரு வட்டார வழக்கு மொழியாகும்.[3][4] இது இந்திய-ஆரிய மொழிகளில் ஒன்றாகும். கிபி 7 அல்லது 8ஆம் நூற்றாண்டில் பைசாச மொழியில் குணாதித்தியர் எனும் கவிஞர் பிரகத்கதை எனும் நூலை இயற்றினார். கிபி 10-ஆம் நூற்றாண்டில் வடமேற்கு இந்தியாவை இசுலாமியர் கைப்பற்றிய ஆக்கிரமித்த போது, பைசாச மொழி அழிவுற்றது.