![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e4/EpicIndia.jpg/640px-EpicIndia.jpg&w=640&q=50)
பரத கண்டம்
From Wikipedia, the free encyclopedia
பரத கண்டம் (Bharata Khanda or Bharata Ksetra)[1]) எனும் சொல் இந்திய துணைக்கண்டத்தை குறிப்பிட வேதங்கள், இராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்களில் உள்ளிட்ட இந்து நூல்களில் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும்.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e4/EpicIndia.jpg/640px-EpicIndia.jpg)
இந்து சாத்திரங்கள் மற்றும் இலக்கியவாதிகளின் கூற்றுப்படியும், இப்பூவுலகில் மக்கள் செழிப்புடன் வாழத் தக்க இடமாக பரத கண்டம் விளங்கியதாக தங்கள் நூல்களில் குறிப்பிடுகிறார்கள்.[2][3][4][5] இந்தியக் குடியரசை பாரத் (பரத கண்டம்) என இந்தி மொழியில் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுவது, துஷ்யந்தன் - சகுந்தலை இணையரின் மகன் பரதன் பெயரில்தான்.