பரதன் (மகாபாரதம்)
From Wikipedia, the free encyclopedia
பரதன் (Bharata) (சமசுகிருதம்: भरत) சமசுகிருத மொழியில் பரதன் எனில் ஏற்றுக் கொள்ளப்பட்டவன் என்று பொருள். துஷ்யந்தன்-சகுந்தலை தம்பதியருக்குக் காட்டில் பிறந்தவன்.[1][2] பரதனின் இயற்பெயர் சர்வதமனா என்பதாகும். சர்வதமனா எனில் அனைத்தையும் அடக்கி ஆள்பவன் என்று பொருள். ஆறு வயது நிரம்பிய சகுந்தலையின் மகன், கன்வ முனிவரின் ஆசிரமத்தில் வளர்கையில் எந்த பலம் மிகுந்த மிருகத்தையும் பற்றி அடக்கி வைப்பதால் சர்வதமனா (அனைத்தையும் அடக்கி கைப்பற்றுபவன்) என அழைக்கப்படுவான் என்று கன்வர் முனிவர் கூறினார்.
பரதன், துஷ்யந்தனுக்குப் பின்பு குரு நாட்டின் பேரரசனான். பரதனின் வம்சத்தில் பிறந்ததால், பாண்டவர் மற்றும் பரத குலத்தினர் என்பர்.
இந்தியக் குடியரசை பாரத் (பரத கண்டம்) என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுவது, இப்பேரரசன் பரதன் பெயரில்தான். வர்ஷம் எனில் மலைகளால் சூழப்பட்ட பகுதி எனப் பொருள்.