இலக்கண நூல்கள்
From Wikipedia, the free encyclopedia
இலக்கணம் என்பது தமிழில் மொழிப்பாங்கை உணர்த்தும் நூல். ஒரு வகையில் மொழியியல் என்னும், தமிழியல் என்றும் கூறத்தக்கவை. இன்று தமிழில் கிடைத்துள்ள பழமையான முழுமையான நூல் தொல்காப்பியம். தொல்காப்பியத்தில் என்ப, என்மனார் புலவர் முதலான தொடர்களால் அதற்கு முன்பே இருந்த தமிழ் இலக்கண நூல்கள் சுட்டப்பட்டுள்ளன.
தமிழில் உள்ள இலக்கண நூல்களைத் தொகுப்பிலக்கண நூல்கள், தனியிலக்கண நூல்கள் எனவும் பாகுபடுத்திக் காணமுடிகிறது. இந்த வகையில் அமைந்துள்ள இலக்கண நூல்கள் தமிழ் இலக்கண நூல்கள் என்னும் தலைப்பில் தனி நூலாக வெளிவந்துள்ளது. [1] அன்றியும் மறைந்துபோன தமிழ் இலக்கண நூல்களும், சில பால்கள் மட்டும் உரைநூல்களில் கிடைக்கப்பெற்றுத் தொகுக்கப்பட்டுள்ள இலக்கண நூல்களும் உள்ளன.