From Wikipedia, the free encyclopedia
கோபப் பிரசாதம் நக்கீரதேவ நாயனாரால் எழுதப்பட்ட நூல்.
ஆசிரியப்பாவால் ஆனது. புலவர் கூற்றுவன் மேல் கோபம் கொண்டு பாடிய செய்தியைக் கொண்டது. நக்கீரதேவ நாயனார் 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர்.
இந்த நூல் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று.
இந்த நூலில் சிவன் பற்றிய கதைச் செய்திகள் புகழாரமாக அடுக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட புகழையெல்லாம் அறியாமல் வாழும் மக்களை எமன் ஏன் இன்னும் கொண்டு போகவில்லை என்று புலவர் கோபம் கொள்கிறார். [1]
சிவனைப் புகழ்கிறார்.[2]
சிவனை விட்டுவிட்டு வேறு நினைப்பவர் முயலை விட்டுவிட்டுக் காக்கையை வேட்டையாடச் சென்றவர் போன்றவர் ஆவர்.[3]
பித்தரைப் போன்ற ஆரியப் புத்தகப் பேய்[4]
இவரை அறுத்து நிலைநாட்டுபவர் ஆரும் இல்லை.[5]
எனவே, இவர்களைக் கொண்டேகாக் கூற்றம் தவறு செய்கிறது என முடிக்கிறார்.[6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.