தில்லி சுல்தானகம்
1206-1526 கால இந்தியத் துணைக் கண்டப் பேரரசு / From Wikipedia, the free encyclopedia
தில்லி சுல்தானகம் என்பது ஓர் இசுலாமியப் பேரரசு ஆகும். இது தில்லியை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டது. இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு இது விரிவடைந்திருந்தது. இப்பேரரசு 320 ஆண்டுகளுக்கு (1206-1526) நீடித்தது.[7][8] தெற்கு ஆசியா மீது கோரி அரசமரபின் படையெடுப்பைத் தொடர்ந்து தில்லி சுல்தானகத்தை ஐந்து தொடர்பற்ற, பல்வேறு வகைப்பட்ட அரச மரபுகள் வரிசையாக ஆட்சி செய்தன. அவை அடிமை அரசமரபு (1206-1290), கல்சி அரசமரபு (1290–1320), துக்ளக் அரசமரபு (1320–1414),[9] சையிது அரசமரபு (1414-1451) மற்றும் லௌதி அரசமரபு (1451–1526) ஆகியவையாகும். நவீனகால இந்தியா, பாக்கித்தான் மற்றும் வங்காளதேசம், மேலும் தெற்கு நேபாளத்தின் சில பகுதிகள் உள்ளிட்ட பெரும் அளவிலான நிலப்பரப்பை இது உள்ளடக்கியிருந்தது.[10]
தில்லி சுல்தானகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1206–1526 | |||||||||||||||||||||||||||||||||||||||||||
அண். 1375இன் கற்றலான் வரைபடத்தின் படி துக்ளக் அரசமரபின் கொடி | |||||||||||||||||||||||||||||||||||||||||||
தலைநகரம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
பேசப்படும் மொழிகள் | பாரசீகம் (அதிகாரப்பூர்வ மற்றும் அரசவை மொழி)[2] இந்தவி (1451 மற்றும் 1526க்கு இடையில் பகுதியளவு அதிகாரப்பூர்வ மொழி)[3] துருக்கிய மொழிகள் (உண்மையில் ஆளும் வர்க்கத்தினரால் பேசப்பட்டது)[4] | ||||||||||||||||||||||||||||||||||||||||||
சமயம் | சன்னி இசுலாம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||
அரசாங்கம் | சுல்தானகம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||
சுல்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||
• 1206–1210 | குத்புத்தீன் ஐபக் (முதல்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||
• 1517–1526 | இப்ராகிம் லௌதி (கடைசி) | ||||||||||||||||||||||||||||||||||||||||||
சட்டமன்றம் | நாற்பது பேரின் குழு | ||||||||||||||||||||||||||||||||||||||||||
வரலாற்று சகாப்தம் | நடுக் காலங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||
• சுதந்திரம்[5] | 12 சூன் 1206 | ||||||||||||||||||||||||||||||||||||||||||
20 திசம்பர் 1305 | |||||||||||||||||||||||||||||||||||||||||||
21 ஏப்ரல் 1526 | |||||||||||||||||||||||||||||||||||||||||||
பரப்பு | |||||||||||||||||||||||||||||||||||||||||||
• 1312. | 3,200,000[6] km2 (1,200,000 sq mi) | ||||||||||||||||||||||||||||||||||||||||||
நாணயம் | தாகா | ||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||
தற்போதைய பகுதிகள் | வங்காளதேசம் இந்தியா பாக்கித்தான் நேபாளம் |
சுல்தானகத்தின் அடித்தளமானது கோரி அரசமரபைச் சேர்ந்த படையெடுப்பாளரான முகம்மது கோரியால் அமைக்கப்பட்டது. 1192ஆம் ஆண்டு தாரைனுக்கு அருகில் அஜ்மீர் ஆட்சியாளரான பிருத்திவிராச் சௌகானின் தலைமையிலான இராசபுத்திரக் கூட்டமைப்பைத் தோற்கடித்த பிறகு அவர் இதை அமைத்தார்.[11] இவ்வெற்றிக்கு முன்னர் கோரி இராசபுத்திரர்களிடம் தோல்வி அடைந்திருந்தார். முகம்மது கோரியின் துருக்கிய அடிமை-தளபதிகளான இல்திசு, ஐபக் மற்றும் குபாச்சா உள்ளிட்டோரால் ஆளப்பட்ட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வேள் பகுதிகளில், கோரி அரசமரபின் வழித் தோன்றல்களில் தில்லி சுல்தானகமும் உண்மையில் ஒன்றாகும். இந்த வேள் பகுதிகள் கோரி நிலப்பரப்புகளைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்டன.[12] நீண்ட கால உட்சண்டைக்குப் பிறகு கல்சி புரட்சியில் அடிமை அரசமரபினர் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்பட்டனர். துருக்கியர்களிடம் இருந்து பல்வேறு வகைப்பட்ட இந்தோ-முஸ்லிம் உயர்குடியினரிடம் சக்தியானது மாறியதை இது குறித்தது.[13][14] கல்சி மற்றும் துக்ளக் ஆகியோரின் ஆட்சியில் வேகமான இஸ்லாமியப் படையெடுப்புகள் தென்னிந்தியாவுக்குள் ஒரு புதிய அலையைப் போல நடந்தன.[15][16] சுல்தானகமானது இறுதியில் புவியியல் விரிவாக்கத்தில் அதன் உச்சத்தை துக்ளக் அரசமரபின் காலத்தில் அடைந்தது. முகம்மது பின் துக்ளக்கின் ஆட்சியின் கீழ் பெரும்பாலான இந்தியத் துணைக் கண்டத்தை சுல்தானகமானது ஆக்கிரமித்திருந்தது.[17] இதற்குப் பிறகு இதன் நிலப்பரப்புகள் குறைய ஆரம்பித்தன. இதற்கான காரணங்கள் இந்துக்கள் இழந்த நிலப்பரப்புகளை மீட்டெடுத்தது, விஜயநகரப் பேரரசு மற்றும் மேவார் போன்ற இந்து இராச்சியங்கள் அழுத்தம் திருத்தமாக தமது விடுதலையை நிறுவியது, மற்றும் வங்காள சுல்தானகம் போன்ற புதிய முஸ்லிம் சுல்தானகங்கள் தில்லி சுல்தானகத்திலிருந்து பிரிந்தது ஆகியவை ஆகும்.[18][19] 1526இல் சுல்தானகமானது வெல்லப்பட்டு முகலாயப் பேரரசு ஆட்சிக்கு வந்தது.
சுல்தானகம் நிறுவப்பட்ட நிகழ்வானது இந்தியத் துணைக் கண்டத்தைப் பன்னாட்டு மற்றும் பல பண்பாட்டு இஸ்லாமிய சமூக மற்றும் பொருளாதார வலையமைப்புக்கு மேலும் அருகில் இழுத்தது.[20] இந்துசுத்தானி மொழி[21] மற்றும் இந்தோ-இஸ்லாமியக் கட்டடக்கலை[22][23] ஆகியவற்றின் வளர்ச்சியில் இதை நாம் கணலாம். மேலும், தில்லி சுல்தானகமானது மங்கோலியத் தாக்குதல்களை (சகதாயி கானரசிலிருந்து வந்த)[24] தடுத்து நிறுத்திய ஒரு சில சக்திகளில் ஒன்றாகவும், இஸ்லாமிய வரலாற்றில் அரியணைக்கு ஏற்றப்பட்ட ஒரு சில பெண் ஆட்சியாளர்களைக் (ரசியா பேகம், ஆட்சி. 1236-1240) கொண்டதாகவும் திகழ்ந்தது.[25] பக்தியார் கல்சியின் நிலப்பரப்பு இணைப்புகள் ஒரு பெரும் அளவிலான இந்து மற்றும் பௌத்த கோயில்களைச்[26] சேதப்படுத்தி அவமதித்ததையும், பல்கலைக்கழகங்கள் மற்றும் நூலகங்கள் அழிக்கப்பட்டதையும் உள்ளடக்கி இருந்தது.[27][28] கிழக்கு இந்தியா மற்றும் வங்காளத்தில் பௌத்த மதத்தின் வீழ்ச்சியில் இதுவும் ஒரு பங்காற்றியது.[29][30] மேற்கு மற்றும் நடு ஆசியா மீது மங்கோலியர்கள் நடத்திய திடீர்த் தாக்குதல்களானவை தப்பித்து ஓடிய போர் வீரர்கள், அறிஞர்கள், துறவிகள், வணிகர்கள், கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்கள் நூற்றாண்டுகளாக அப்பகுதிகளிலிருந்து இந்தியத் துணைக் கண்டத்திற்குப் புலம்பெயரும் சூழ்நிலையை உருவாக்கியது. இவ்வாறாக இஸ்லாமியப் பண்பாட்டை புலம் பெயர்ந்தவர்கள் நிறுவினர்.[31][32]