வம்சத்தின் முதல் மன்னரான சந்திரதேவன், கி.பி 1090 -க்கு முன்னர், காலச்சூரி அதிகாரத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு ஒரு இறையாண்மை கொண்ட அரசை நிறுவினார். இவரது பேரன் கோவிந்தச்சந்திரனின் கீழ் இராச்சியம் அதன் உச்சத்தை அடைந்தது. அவர் சில கலாச்சூரி பிரதேசங்களை இணைத்து, கசனவித்துகளின் தாக்குதல்களைத் தடுத்து, பாலர்களுடன் போரிட்டார். கி.பி.1194 -இல், கோவிந்தச்சந்திரனின் பேரன் செயச்சந்திரன்கோரிகளால் தோற்கடிக்கப்பட்டார். இது வம்சத்தின் ஏகாதிபத்திய அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. 12 ஆம் நூற்றாண்டில் ஜெயச்சந்திரனின் வாரிசுகள் தில்லி சுல்தானகத்தால் தோற்கடிக்கப்பட்டபோது இராச்சியம் இல்லாமல் போனது.
Deepak Yadav(2011)."Aspects of rural settlement under the Gahadavala dynasty: c. 11th century CE to 13th century CE (An inscriptional analysis)".Proceedings of the Indian History Congress72(1): 360–367.
Saurabh Kumar(2015)."Rural Society and Rural Economy in the Ganga Valley during the Gahadavalas".Social Scientist43(5/6): 29–45.