From Wikipedia, the free encyclopedia
வகேலா வம்சம் (Vaghela dynasty) (ஆட்சி: 1243–1299) என்பது மேற்கு இந்தியாவின் தற்கால குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிர தீபகற்ப பகுதிகளை 1243 முதல் 1304 முடிய ஆண்ட அரசகுலம். சோலாங்கி ராஜபுத்திர அரச குலத்தின் ஒரு கிளைப் பிரிவே வகேலா வம்சமாகும்.
வகேலா வம்சம் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1243–1299 | |||||||||||||
தலைநகரம் | தோல்கா | ||||||||||||
பேசப்படும் மொழிகள் | சௌரசேனி, பிராகிருதம், சமஸ்கிருதம் | ||||||||||||
சமயம் | இந்து, சமணம் | ||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||
• c. 1243 - c. 1262 | வீர்தவாலா (விசாலா) | ||||||||||||
• c. 1262 - c. 1275 | அர்சுனதேவன் (விசால்தேவன்) | ||||||||||||
• c. 1275 - c. 1297 | சாரங்கதேவன் | ||||||||||||
• c. 1297-1304 | இரண்டாம் கர்ணதேவன் | ||||||||||||
வரலாறு | |||||||||||||
• தொடக்கம் | 1243 | ||||||||||||
• முடிவு | 1299 | ||||||||||||
|
வகேலா அரச குலத்தினரின் தலைநகரம் தற்கால அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள தோல்கா நகரமாகும்.
தில்லி சுல்தானகம் நிறுவப்பட்டப் பின் சௌராஷ்டிர தீபகற்பத்தில் இறுதி இந்து வகேலா வம்ச இராச்சியம், வகேலா வம்சத்தின் இறுதி மன்னர் இரண்டாம் கர்ணதேவன் ஆட்சியின் போது 1299-ஆம் ஆண்டில் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியால் சௌராஷ்டிரம் வெல்லப்பட்டு, குஜராத் பகுதிகள் அனைத்தும் தில்லி சுல்தானகத்தின் கட்டுக்குள் சென்றது. [1][2]
வகேலா குல ஆட்சியாளர்கள் காலத்தில் அபு மலையில் தில்வாரா கோயில் மற்றும் கிர்நாரில் சமணக் கோயில்கள் எழுப்பட்டது.[3][4] மேலும் குடிநீர் தேவைக்காக, அகமதாபாத் அருகே அடாலஜ் கிராமத்தில் ஐந்து தளங்களுடன் கூடிய ஆழமான, அழகிய அடாலஜ் படிக்கிணறு அமைக்கப்பட்டது.
வகேலா வம்ச அரசர்கள்;
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.