காமராசர்
இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் / From Wikipedia, the free encyclopedia
காமராசர் (ஆங்கில மொழி: Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) ஓர் இந்திய விடுதலைப் போராட்ட ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் 13 ஏப்ரல் 1954 முதல் 2 அக்டோபர் 1963 வரை ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். இவர் 1964 முதல் 1967 வரை இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார். அப்பொழுது லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகியோர் இந்தியப் பிரதமர் பதவிக்கு உயர்த்தப்படுவதற்குக் காரணமாக இருந்தார். இதன் காரணமாக 1960 களில் இந்திய அரசியலில் இவர் "கிங்மேக்கர்" (அரசர்களை உருவாக்குபவர்) என்று பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டார். பின்னர், இவர் நிறுவன காங்கிரசு கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்தார்.
கு. காமராசர் | |
---|---|
சென்னை மாநில 3 ஆவது முதலமைச்சர் | |
பதவியில் 1954–1963 | |
ஆளுநர் | |
முன்னையவர் | இராசகோபாலாச்சாரி |
பின்னவர் | எம். பக்தவத்சலம் |
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1952–1954 | |
பிரதமர் | ஜவஹர்லால் நேரு |
முன்னையவர் | தொகுதி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | முத்துராமலிங்கத் தேவர் |
தொகுதி | திருவில்லிபுத்தூர் |
பதவியில் 1967–1975 | |
பிரதமர் | இந்திரா காந்தி |
முன்னையவர் | அ. நேசமணி |
பின்னவர் | குமரி அனந்தன் |
தொகுதி | நாகர்கோவில் |
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1954–1957 | |
முன்னையவர் | அருணாச்சல முதலியார் |
பின்னவர் | வி. கே. கோதண்டராமன் |
தொகுதி | குடியாத்தம் |
பதவியில் 1957–1967 | |
முன்னையவர் | இராமசாமி நாயுடு |
பின்னவர் | இராமசாமி நாயுடு |
தொகுதி | சாத்தூர் |
இந்திய தேசிய காங்கிரசு தலைவர் | |
பதவியில் 1964–1967 | |
முன்னையவர் | நீலம் சஞ்சீவ ரெட்டி |
பின்னவர் | எஸ். நிசலிங்கப்பா |
தலைவர் - நிறுவன காங்கிரசு | |
பதவியில் 1969–1975 | |
பின்னவர் | மொரார்சி தேசாய் |
சென்னை மாநில காங்கிரசு தலைவர் | |
பதவியில் 1946–1952 | |
பின்னவர் | ப. சுப்பராயன் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | காமாட்சி (1903-07-15)15 சூலை 1903 விருதுப்பட்டி, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | (1975-10-02)2 அக்டோபர் 1975 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இளைப்பாறுமிடம் | பெருந்தலைவர் காமராசர் நினைவகம் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (1969 வரை) நிறுவன காங்கிரசு (1969–75) |
வாழிடம்s |
|
தொழில் | |
விருதுகள் | பாரத ரத்னா (1976) |
கையெழுத்து | |
புனைப்பெயர்கள் |
|
பிறப்பிற்கு பின் காமாட்சியாக அறியப்பட்ட காமராசர், பள்ளிப் படிப்பை ஆரம்பத்திலேயே நிறுத்திவிட நேர்ந்தது. இவர் 1920 களில் இந்திய சுதந்திர இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இந்த செயல்பாடுகள் காரணமாக பிரித்தானிய அரசால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். 1937 இல், காமராசர் சென்னை சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது மீண்டும் மூன்று ஆண்டுகள் சிறையிலிடப்பட்டார்.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, காமராசர் 1952 முதல் 1954 வரை மக்களவையில் உறுப்பினராகப் பணியாற்றினார். பின்னர் ஏப்ரல் 1954 இல் சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை ஏற்றார். ஏறக்குறைய பத்தாண்டுகள் முதலமைச்சராக இருந்த இவர், மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றினார். குழந்தைகளுக்கு இலவசக் கல்வி மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தமிழகத்தில் கல்வியை மேம்படுத்துவதில் இவர் ஆற்றிய பங்கின் காரணமாக கல்வித் தந்தை என்று பரவலாக அறியப்படுகிறார்.
காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர் கருப்பு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர், கர்மவீரர் என்று புகழப்படுகிறார். காமராசரின் மறைவுக்குப் பின், 1976 இல் இந்திய அரசு இவருக்கு மிக உயரிய விருதான பாரத ரத்னாவை வழங்கி கௌரவப்படுத்தியது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையம் மற்றும் பல தெருக்கள் மற்றும் கட்டிடங்களுக்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.