ஐதராபாத் இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
ஐதராபாத்து இராச்சியம் இந்தியாவின் தென்மத்திய பகுதியில் அமைந்திருந்த இராச்சியம் ஆகும். 1798 முதல் 1948 வரை நிசாம் சந்ததியினரால் ஆளப்பட்டு வந்தது. இதன் தலைநகரம் ஐதராபாத்தாக இருந்தது.
ஐதராபாத் இராச்சியம் ریاست حیدرآباد హైదరాబాద్ రాష్ట్రం ಹೈದರಾಬಾದ್ ಪ್ರಾಂತ್ಯದ हैदराबाद राज्य | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1798–1948 | |||||||||||
நிலை | பிரித்தானிய இந்தியாவில் மன்னராட்சி (1803–1947) அங்கீகரிக்கப்படாத நாடு (1947–1948) | ||||||||||
தலைநகரம் | அவுரங்காபாத் 1724 முதல் 1763 வரை, ஐதராபாத் 1763 முதல் 1948 வரை | ||||||||||
பேசப்படும் மொழிகள் | தக்கினி, மராத்தி, தெலுங்கு, பாரசீகம், கன்னடம் | ||||||||||
சமயம் | இசுலாம் | ||||||||||
அரசாங்கம் | மன்னராட்சி (1798 – 1948) இந்திய ஒன்றியத்தின் மாகாணம் (1948–1950) இந்தியாவின் மாநிலம் (1950–1956) | ||||||||||
நிசாம் | |||||||||||
• 1720–48 | கமார்-உத்-தின் கான், (முதல்) | ||||||||||
• 1911–48 | ஓசுமான் அலி கான் (கடைசி) | ||||||||||
பிரதமர் | |||||||||||
• 1724–1730 | இவாசு கான் (முதல்) | ||||||||||
• 1947–1948 | மீர் லயிக் அலி (கடைசி) | ||||||||||
வரலாறு | |||||||||||
• தொடக்கம் | 1798 | ||||||||||
1946 | |||||||||||
18 செப்டம்பர் 1948 | |||||||||||
• பிரிவினை | 1 நவம்பர் 1956 | ||||||||||
பரப்பு | |||||||||||
215,339 km2 (83,143 sq mi) | |||||||||||
நாணயம் | ஐதராபாதி ரூபாய் | ||||||||||
|
தற்கால உசுபெக்கிசுத்தானின் சமர்கந்து பகுதியிலிருந்து 17 ஆவது நூற்றாண்டில் இந்தியாவிற்கு குடிபெயர்ந்த துருக்கியர்கள் அசாஃப் ஜாஹி வம்சத்தினர். இவர்கள் முகலாயப் பேரரசில் பணிக்குச் சேர்ந்தனர். 1680களில் இப்பகுதி முகலாயர் வசப்பட்டது. 18-ஆவது நூற்றாண்டில் முகலாயப் பேரரசு நலிவடையத் தொடங்கிய நிலையில், பேரரசின் தென்னிந்தியப் பகுதிகளை கைப்பற்ற முனைந்த முகலாய ஆளுநரை ஐதராபாத் நிசாம் தோல்வியடையச் செய்து 1724-இல் தம்மை ஐதராபாத்தின் நிசாம்-அல்-முல்க் என அறிவித்துக் கொண்டார். மராட்டியர்களின் தாக்குதல்களை எதிர்ப்பதில் முனைந்திருந்த முகலாய பேரரசரால் இதனைத் தடுக்க முடியவில்லை.
முகலாய பேரரசு நலிவுற்று மராட்டியப் பேரரசு வலுவடைந்து வந்தது. நிசாம் மராட்டியர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இவற்றில் முக்கியமானவை இராக்ஷஸ்புவன் சண்டை, பால்கெட் சண்டை மற்றும் கர்தா சண்டை ஆகியனவாகும். இவை அனைத்திலும் மராட்டியர்கள் வெற்றி கண்டனர். நிசாம் மராட்டியர்களின் தலைமையை ஏற்று கப்பம் கட்டி வந்தார்.[1][2]
1817-ஆம் ஆண்டு வரை ஐதராபாத் இராச்சியம் தன்னாட்சியுடன் முடியாட்சியாக செயல்பட்டது. பின்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் இந்த இராச்சியம் 1818-ஆம் ஆண்டு முதல், பிரித்தானிய இந்தியா அரசுக்கு கட்டுப்பட்டு, ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது.[3][4][5] 1903-இல் ஐதராபாத் இராச்சியத்தின் பீரார் மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மத்திய மாகாணங்களில் இணைக்கப்பட்டது.
1818-இல் ஐதராபாத்து பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழான சமஸ்தானமானது அந்நிறுவனத்திடம் துணைப்படைத் திட்டம் மூலமாக தனது வெளியுறவுகளை தீர்மானிக்கும் அதிகாரத்தை ஒப்படைத்தது. 1903-இல் நாட்டின் பீரார் மாகாணப் பகுதியை இழந்தது; அந்த மாகாணம் பிரித்தானிய இந்தியாவின் மத்திய மாகாணத்துடன் இணைக்கப்பட்டது.
1947இல் இந்தியப் பிரிவினையின்போது இந்திய மன்னராட்சிகளிலேயே அப்போது ஐதராபாத் மன்னராட்சிதான் மிகப் பெரியதாக இருந்தது. அதன் பரப்பளவு 82,698 சதுர மைல்கள் (214,190 km2) ஆக இருந்தது. 16.34 மில்லியன் மக்கள் (1941 கணக்கெடுப்பு) வாழ்ந்து வந்தனர். இவர்களில் பெரும்பாலோர் (85%) இந்துக்கள். ஐதராபாத்து மன்னராட்சிக்கு தனி படைத்துறை, வான்வழிச்சேவை, தொலைத்தொடர்பு அமைப்பு, தொடருந்து அமைப்பு, அஞ்சல்துறை, நாணயவியல் மற்றும் வானொலி சேவை அமைப்புக்கள் இருந்தன.