சமர்கந்து
From Wikipedia, the free encyclopedia
சமர்கந்து (உசுபேகியம்: Samarqand; தாஜிக்: Самарқанд; பாரசீக மொழி: سمرقند; சொகிடிய மொழியில்: "கற்கோட்டை" அல்லது "கல் நகரம்") உசுபெக்கிசுத்தான் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் சமர்கந்து மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். சீனாவுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையிலான பட்டுப் பாதையின் நடுவில் உள்ள இதன் அமைவிடம் காரணமாகவும் இசுலாமிய அறிவியலின் மிக முதன்மையான தளமாகவும் இருப்பதால் இவ்வூர் புகழ் மிக்கதாயிருக்கின்றது. 14 ஆம் நூற்றாண்டில் சமர்கந்து நகரம் தைமூர்ப் பேரரசின் தலைநகரமாயிருந்தது. தைமூரின் அடக்கத்தலமும் இவ்வூரிலேயே இருக்கிறது. இங்குள்ள புகழ் மிக்க கட்டிடங்களில் பீபி-கானிம் பள்ளிவாசல் குறிப்பிடத் தக்கது. 'ரசிசுத்தான்' என்பது இவ்வூரின் பண்டைய நகர மையமாகும்.
சமர்கந்து | |
---|---|
நாடு | உஸ்பெகிஸ்தான் |
மாகாணம் | சமர்கந்து மாகாணம் |
ஏற்றம் | 702 m (2,303 ft) |
மக்கள்தொகை (2008) | |
• நகரம் | 5,96,300 |
• நகர்ப்புறம் | 6,43,970 |
• பெருநகர் | 7,08,000 |
இணையதளம் | http://www.samarkand.info |
2001 ஆம் ஆண்டு, சமர்கந்து - பண்பாடுகளின் கூடல் என்ற தலைப்பில் இவ்வூர் உலக பாரம்பரியக் களமொன்றாக யுனெசுக்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.