பெருநகர் பகுதி
From Wikipedia, the free encyclopedia
பெருநகர் பகுதி (metropolitan area) என வேலைவாய்ப்பும் மக்கள்தொகையும் மிகுந்த நகரமையத்தை சுற்றி சமூக பொருளியல் காரணங்களால் பிணைந்துள்ள சிறுபயணத் தொலைவில் அமைந்துள்ள புறநகர்ப்பகுதிகளை உள்ளடக்கிய நகரப்பகுதி அழைக்கப்படுகிறது. இக்காரணங்களால் பெருநகர்ப் பகுதி சில நேரங்களில் பயணிகள் வட்டம் என்றும் தொழிலாளர் சந்தை பகுதி என்றும் அறியப்படுகிறது.காட்டாக, சென்னையை அண்மித்துச் சூழ்ந்துள்ள திருவள்ளூர் மாவட்ட நகரங்களும் காஞ்சிபுரம் மாவட்ட நகரங்களும் அவற்றின் பணிவாய்ப்பு, போக்குவரத்து மற்றும் வணிகத் தொடர்புகளால் பிணைக்கப்பட்டு சென்னை பெருநகரம் என அழைக்கப்படுகிறது.