இந்தியப் பிரிப்பு
இந்திய விடுதலைப் போராட்டம் / From Wikipedia, the free encyclopedia
இந்தியப் பிரிவினை (Partition of India) என்பது 1947இல் ஆகஸ்ட் 14 மற்றும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரித்தானிய இந்தியப் பேரரசை[1] ஆங்கிலேயர்கள் மத ரீதியாகப் பிரித்தமையைக் குறிக்கும். இந்த நிகழ்வு காரணமாக இந்திய மேலாட்சி அரசு (பின்னர் இந்தியக் குடியரசு), பாக்கித்தான் மேலாட்சி(பின்னர் பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு மற்றும் வங்காளதேச மக்கள் குடியரசு) மற்றும் பூடான் ஆகிய தனிநாடுகள் உருவாக்கப்பட்டன[2].
பிரித்தானிய இந்தியாவில் நடைமுறையில் உள்ள மதங்கள் (1901), பிரிவினைக்கான அடிப்படை | |
தேதி | 14–15 ஆகத்து 1947 |
---|---|
நிகழ்விடம் | தெற்கு ஆசியா |
காரணம் | இந்திய விடுதலைச் சட்டம், 1947 |
விளைவு | பிரித்தானிய இந்தியாவை இரண்டு சுதந்திர மேலாட்சிகளாகப் பிரித்தல், இந்திய மேலாட்சி அரசு மற்றும் பாக்கித்தான் மேலாட்சி அரசு, மதவெறி வன்முறை, மத சுத்திகரிப்பு,மற்றும் ஏதிலி நெருக்கடி |
இறப்புகள் | 200,000–2 மில்லியன் |
இடம்பெயர்வு | 10–20 மில்லியன் |
இப்பிரிவினை இந்திய விடுதலைச் சட்டம் 1947 இல் அறிவிக்கப்பட்டு, பிரித்தானிய இந்தியா கலைக்கப்படக் காரணமாய் அமைந்தது[3] இப்பிரிவினையால் சில நூறாயிரம் பொருட் சேதம் மட்டுமின்றி 12 .5 மில்லியன் மக்கள் இடம் பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.[4][5][6]. இம்மூர்க்கப் பிரிவினை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பரஸ்பர சந்தேகத்தை விதைத்தது. இந்தச் சந்தேகம் இந்நாள் வரை இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவிற்கு இடைஞ்சலாய் இருந்து வருகின்றது.[7]
முன்னாள் பஞ்சாப் மாநிலம் இந்தியப் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் பஞ்சாபாக பிரிந்தது[8]. வங்காள மாகாணமும் மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு பாகிஸ்தானாக பிரிந்தது. மேலும் தொடர்வண்டி துறை, இராணுவம், மைய கருவூலம் போன்ற சொத்துகளும் பிரிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் வரலாற்றில் மிக வேகமான மக்கள் இடமாற்றம் நடந்தது. மொத்தத்தில் 17.9 மில்லியன் மக்கள் இடம் மாற்றியுள்ளனர், ஆனால் இதில் 14.5 மில்லியன் மக்கள் மட்டும் தமது செல்லிடத்தைச் சேர்ந்தனர்.
தெற்காசியாவில் இந்தியா மற்றும் பாக்கித்தான் ஆகிய நாடுகளை மட்டும் இந்த நிகழ்வு பாதிப்படைய வைத்தது. பிரித்தானிய இந்திய பேரரசில் பர்மா, மாலைதீவுகள், இலங்கை போன்ற வேறு நாடுகள் தனியாக விடுதலை பெற்றன.1930-களுக்கு முன்பு வரை இந்தியப்பிரிவினைக் குறித்து யாரும் கருதவில்லை. இந்திய துணைகண்டத்தின் மொத்த விடுதலையையே அனைவரும் எதிர் நோக்கியிருந்தனர். முஸ்லீம் இன மக்களுக்கு தனி தேசம் வேண்டும் என முதன் முதலில் குரல் கொடுத்தவர் இக்பால் ஆவார். அதன் பின் அத்தேசம் வேண்டுமென ஆதரித்தவர் சவுத்ரி ரகமத் அலி என்பவராவார். அப்படி பிரிக்கப்படும் பகுதிக்கு பாகிஸ்தான் எனும் பெயர் இட்டவரும் சவுத்ரி ரகமத் அலி ஆவார்[9].