![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/28/Jaffna_Kingdom.svg/langta-640px-Jaffna_Kingdom.svg.png&w=640&q=50)
யாழ்ப்பாண அரசு
From Wikipedia, the free encyclopedia
யாழ்ப்பாண அரசு (Jaffna kingdom) சிங்கைநகர் அரசு அல்லது ஆரியச்சக்கரவர்த்தி அரசு (Kingdom of Aryacakravarti) (கி.பி 1215–1624) எனப்படுவது இலங்கையின் தற்போதைய வடக்கில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் யாழ்ப்பாணம் நகரில் அமைந்திருந்த வரலாற்று அரசைக் குறிக்கின்றது. இந்தியாவின் கலிங்க நாட்டைச் சேர்ந்த, யாழ்ப்பாண அரசின் நிறுவனர் எனப்படும் கலிங்க மாகன் படையெடுப்பின் பின் இது அமைக்கப்படதெனக் கூறப்படுகின்றது.[1][2][3][4] பலமிக்க படையை வடக்கு, வடகிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டு, பின் தற்போதைய தென்னிந்தியாவின் பாண்டியர் அரசுக்கு 1258 இல் நிலமாணிய வரியை கப்பமாக செலுத்தி வந்த இவ்வரசு பாண்டியரின் உடைவின் பின்னர் 1323 இல் விடுதலை பெற்றது.[1][5] தில்லி சுல்தானகம் முசுலிம் அரசின் படைத்தளபதி மாலிக் கபூர் மூலம் 1323 இல் மதுரையிலிருந்த கடைசி பாண்டிய ஆட்சியாளர் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதும் பாண்டியரின் உடைவு ஏற்பட்டது.[6] இவவ்வரசு ஆரம்பம் முதல் மத்திய 14 ஆம் நூற்றாண்டு வரை இலங்கைத் தீவில் பலம் பெற்று அப்பிராந்திய அரசுகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. ஆயினும், சுமார் 1450 ஆண்டளவில் இளவரசன் சப்புமால் படையெடுப்பினால் போட்டிமிக்க கோட்டை இராச்சியம் மூலம் தோற்கடிக்கப்பட்டது.[5]
ஆரியச்சக்கரவர்த்தி அரசு யாழ்ப்பாண அரசு | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1215–1624 | |||||||||
![]() யாழ்ப்பாண அரசு அதன் உச்சத்தில் கி.பி. 1350. | |||||||||
தலைநகரம் | நல்லூர் | ||||||||
பேசப்படும் மொழிகள் | தமிழ் | ||||||||
சமயம் | இந்து சமயம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
ஆரியச் சக்கரவர்த்தி | |||||||||
கூழங்கைச் சக்கரவர்த்தி (கலிங்க மாகன்) [1][2][3][4] | |||||||||
• 1617–1619 | சங்கிலி குமாரன் | ||||||||
வரலாற்று சகாப்தம் | மத்திய காலம் | ||||||||
1215 | |||||||||
• பாண்டியர் பாண்டியரிடமிருந்து விடுதலை | 1323 | ||||||||
1450 | |||||||||
• ஆரியச் சக்கரவர்த்திகள் மீளமைத்தல் | 1467 | ||||||||
1505 | |||||||||
• நல்லூரின் வீழ்ச்சி | 1624 | ||||||||
நாணயம் | சேது நாணயம் | ||||||||
|
இது சிறீ ஜெயவர்தனபுர கோட்டை கட்டுப்பாட்டில் இருந்து 1467 இல் விடுதலை பெற்றது.[7] இதன் பின்தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களினால் முத்துக்கள், யானை போன்றவற்றின் ஏற்றுமதி வரி, நில வரி ஆகியவற்றை அதிகரித்து பொருளாதார முக்கியத்துவத்தில் தங்கள் ஆற்றலை நகர்த்தினர்.[8][9] அது அக்கால இலங்கைத் தீவில் இருந்த பல அரசுகளைவிடக் குறைவான நில மானிய முறைமையாக இருந்தது.[9] ஆட்சிக்காலத்தில், மொழி வளர்ச்சிக்காக கல்விச்சாலைகள் உட்பட உள்ளூர் தமிழ் இலக்கியம் உருவாக்க முக்கியத்துவம், இந்து கோவில்கள் கட்டுமானம் என்பன இடம்பெற்றன.[10][11][12]
1505 இல் இலங்கைத் தீவிற்கு போர்த்துகல் குடியேற்ற சக்தியின் வருகை, பாக்கு நீரிணையின் கேந்திர முக்கியத்துவம் எல்லா சிங்கள அரசுகளையும் தென்னிந்தியாவினுடன் இணைத்தமை போன்றவை அரசியல் குழப்பங்களை உருவாக்கின. பல அரசர்கள் மோதி, பின்னர் போர்த்துக்கல்லுடன் சமாதானம் செய்து கொண்டனர். 1617 இல், இரண்டாம் சங்கிலி அரியணையை பறித்துக் கொண்டு, போர்த்துக்கல்லுடன் சண்டையிட்டார், ஆயினும் தோற்கடிக்கப்பட்டார். இதனால், 1619 இல் யாழ்ப்பாண அரசின் விடுதலை முடிவுக்கு வந்தது.[13][14] தஞ்சை நாயக்கர்கள் அரசின் ஆதரவுடன் மிக்கபிள்ளை ஆராச்சி போன்ற போராட்டக்காரர்கள் அரசை மீளவும் அமைக்க முயன்று, கடைசியில் தோற்றுப் போயினர்.[15][16][16] யாழ்ப்பாண நகரின் புறநகரான நல்லூர் அப்போது தலைநகராக இயங்கியது.