பிரிஸ்பேன்
ஆஸ்திரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்தின் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
பிரிஸ்பேன் அல்லது பிறிஸ்பேன் (Brisbane, /ˈbrɪzbən/, "பிறிஸ்பன்")[4] ஆத்திரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்தின் தலைநகரும், அம்மாநிலத்தின் மக்கள் அடர்த்தி கூடிய நகரமும்,[5] ஆத்திரேலியாவின் மூன்றாவது பெரிய மக்கள்தொகை கொண்ட நகரமும் ஆகும். பிரிஸ்பேனின் பெருநகர்ப் பகுதியில் 2.3 மில்லியன் மக்கள் (சூன் 2013) வாழ்கின்றனர்.[6][7] மிதவெப்ப மண்டல காலநிலையுடையது. ஐரோப்பியரின் ஆரம்பகாலக் குடியிருப்புப் பகுதியில் பிரிஸ்பேன் ஆற்றின் கரையில் மத்திய வணிகப் பகுதி அமைந்துள்ளது.[8]
பிரிஸ்பேன் குயின்ஸ்லாந்து | |||||||
பிரிஸ்பேன் நகர மையமும் ஸ்டோரி பாலமும் | |||||||
மக்கள் தொகை: | 1,857,594 (2007) [1] (3வது) | ||||||
• அடர்த்தி: | 918/கிமீ² (2,377.6/சதுர மைல்) (2006)[2] | ||||||
அமைப்பு: | 1824 | ||||||
ஆள்கூறுகள்: | 27°28′04″S 153°01′40″E | ||||||
பரப்பளவு: | 5904.8 கிமீ² (2,279.9 சது மைல்) [3] | ||||||
நேர வலயம்: | AEST (பகலொளி சேமிப்பு இல்லை) (UTC+10) | ||||||
அமைவு: |
| ||||||
உள்ளூராட்சிகள்: |
| ||||||
கவுண்டி: | ஸ்டான்லி | ||||||
மாநில மாவட்டம்: | பல (38) | ||||||
நடுவண் தொகுதி: |
| ||||||
|
நியூ சவுத் வேல்ஸ் குடியேற்ற நாட்டின் ஆளுநராக 1821 முதல் 1825 வரை இருந்த சர் தாமஸ் பிரிஸ்பேன் என்பவரின் பெயரால் பிறிஸ்பேன் ஆறு அழைக்கப்படுகிறது. இவ்வாற்றின் பெயரே அதன் கரையிலுள்ள பிறிஸ்பேன் நகரத்தின் பெயராகவும் விளங்குகிறது.[5]
தற்போதுள்ள நகர வணிக மத்தியிலிருந்து 28 கிலோமீட்டர் வடக்கேயுள்ள ரெட்கிளிஃப் என்ற இடத்தில் முதல் ஐரோப்பியக் குற்றவாளிகள் குடியேற்றம் 1824ஆம் உருவாக்கப்பட்டது. 1825ஆம் ஆண்டு வடக்கு கீ பகுதியில் புதிய குற்றவாளிகள் குடியேற்றம் உருவாக்கப்பட்டு பழைய ரெட்கிளிஃப் குடியேற்றம் மூடப்பட்டது. பிரிஸ்பேனில் சுதந்திர மக்கள் குடியேற்றம் 1842 முதல் அனுமதிக்கப்பட்டது. 1859 ஆம் ஆண்டில் நியூ சவுத் வேல்சில் இருந்து குயின்சுலாந்து பிரிக்கப்பட்டு பிரிஸ்பேனைத் தலைநகராகக் கொண்டு தனிக் குடியேற்ற நாடாக ஆக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நேச நாடுகளின் அணியில் தென்மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் டக்ளசு மெக்கார்த்தருக்காக பிறிஸ்பேன் நகரம் பெரும் பங்காற்றியது. பிறிஸ்பேன் நகரில் 1982 பொதுநலவாய விளையாட்டுக்கள், எக்சுபோ '88 கண்காட்சி, 2001 நல்லெண்ணப் போட்டிகள், 2014 ஜி-20 உச்சிமாநாடு உட்படப் பல பன்னாட்டு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.