![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/c/c1/BHEL_Logo.svg/langta-640px-BHEL_Logo.svg.png&w=640&q=50)
பாரத மிகு மின் நிறுவனம்
From Wikipedia, the free encyclopedia
பாரத மிகு மின் நிறுவனம் (Bharat Heavy Electrical Limited- BHEL, பாரத் ஃகெவி எலெக்ட்ரிகல்சு லிமிடெட்) (முபச: 500103 , தேபச: BHEL ) இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மகாரத்னா மதிப்பைப் பெற்ற மிகப் பெரிய நிறுவனம்.
![]() | |
வகை | பொதுத்துறை நிறுவனம் (முபச: 500103 ) |
---|---|
நிறுவுகை | 1956 |
நிறுவனர்(கள்) | இந்திய அரசு |
தலைமையகம் | புது தில்லி, இந்தியா |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா மற்றும் 70 நாடுகளில்[1] |
முதன்மை நபர்கள் | அடுல் சோப்டி (தலைவர் & நிஇ)[2] |
தொழில்துறை | பொறியியல் & உற்பத்தி |
உற்பத்திகள் | மின் உற்பத்தி, தொழில், கொதிகலன் உற்பத்தி போக்குவரத்து, மறு சுழற்சி ஆற்றல், எரி எண்ணெய் மற்றும் எரிவாயு, மின் கடத்திகள் |
வருமானம் | ▲ ₹43,451 கோடி (US$5.4 பில்லியன்) (2010)[3] |
நிகர வருமானம் | ▲ $961 மில்லியன் (2010) |
மொத்தச் சொத்துகள் | ▲ $10.816 பில்லியன் (2010)[3] |
பணியாளர் | 46,274 (2010)[3] |
இணையத்தளம் | www.bhel.com |
இந்தியாவில் போபால், அரித்வார், ஐதராபாத், சான்சி, திருச்சிராப்பள்ளி, இராணிப்பேட்டை ஆகிய ஊர்கள் உள்பட பதினைந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவுகள் உள்ளன. இதன் தலைமை அலுவலகம் புது தில்லியில் அமைந்துள்ளது.
இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் மின்னாக்கி நிலையங்களை அமைப்பதற்கு ஏதுவாக நான்கு வணிகக் கோட்டங்கள் (POWER SECTORS) உருவாக்கப்பட்டுள்ளன. பன்னாட்டு இயக்கங்களுக்காக தனிப்பிரிவும் உள்ளது. (INTERNATIONAL OPERATIONS DIVISION) . மின்னுருவாக்கு நிலையங்களுக்குத் தேவையான பாய்லர் எனப்படும் கொதிகலன், டர்பைன் எனப்படும் சுழலிகள், டர்போ செனரேட்டர்கள் (சுழலி மின்னாக்கிகள்), நிலைமின்னியல் தூசு வடிகட்டிகள் (Electro Static Precipitators- ESP) போன்ற பல்வேறு பெருவகை மின்னுருவாக்குத் துணைகருவிகளையும், பைஞ்சுதை (சிமென்ட்டு), எண்ணெய் தூய்மைப்படுத்து நிலையங்கள் போன்ற தொழில் துறை நிறுவனங்களுக்குத் தேவையான துணைக்கருவிகளையும் இந்நிறுவனம் உருவாக்கி வழங்குகிறது.
தமிழில் "பாரத மிகுமின் தொழிலகம்" என்றும் சுருக்கமாக "பெல்" (BHEL) என்றும் இந்நிறுவனம் அழைக்கப்படுகின்றது.தமிழ் நாட்டில் திருச்சிராப்பள்ளி, இராணிப்பேட்டை மற்றும் சென்னை ஆகிய ஊர்களில் இதன் கிளைகள் உள்ளன. தற்போது திருமயத்திலும் மற்றொரு உற்பத்திப் பிரிவினை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.