இராணிப்பேட்டை
பெருநகர வேலூர் மாநகராட்சி / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய இராணிப்பேட்டை மாவட்டம் கட்டுரையைப் பார்க்க.
இராணிப்பேட்டை (Ranipet) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இதுவே இராணிப்பேட்டை மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆகஸ்டு 15-ஆம் தேதி பிரித்து இராணிப்பேட்டை மாவட்டமாக உருவாக்கப்பட்டது. மாவட்டம் 28.11.2019 அன்று தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. இராணிப்பேட்டையில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் அதிகம் கொண்டது.
விரைவான உண்மைகள் இராணிப்பேட்டை, நாடு ...
இராணிப்பேட்டை | |
---|---|
அடைபெயர்(கள்): தொழிற்சாலை நகரம் | |
ஆள்கூறுகள்: 12.948700°N 79.319000°E / 12.948700; 79.319000 | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | இராணிப்பேட்டை |
பகுதி | தொண்டை நாடு |
அரசு | |
• வகை | தேர்வு நிலை நகராட்சி |
• நிர்வாகம் | இராணிப்பேட்டை நகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | எஸ். ஜெகத்ரட்சகன் |
• சட்டமன்ற உறுப்பினர் | ஆர். காந்தி |
• மாவட்ட ஆட்சியர் | தெ. பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப. |
ஏற்றம் | 208 m (682 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 50,764 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீடு | 632 401 |
தொலைபேசி குறியீடு | 91 4172 |
வாகனப் பதிவு | TN-73 |
சென்னையிலிருந்து தொலைவு | 115 கி.மீ. (71 மைல்) |
வேலூரிலிருந்து தொலைவு | 27 கி.மீ. (17 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 288 கி.மீ. (179 மைல்) |
இணையதளம் | ranipet |
மூடு