இந்திய அரசு
From Wikipedia, the free encyclopedia
இந்திய அரசு (Government of India, இந்தி: भारत सरकार, பாரத் சர்கார்[1]), இந்திய நாட்டின் மத்திய அரசு இந்திய அரசியல் சட்டப்படி அமைக்கப்பெற்றது. அதுமட்டுமில்லாமல் கூட்டாட்சித் தத்துவத்தின்படி, குடியரசு இந்தியாவில் அடங்கிய 28 மாநிலங்களையும் மற்றும் 8 ஆட்சிப்பகுதிகளையும் தன் ஆளுமையில் ஒன்றிணைக்கின்றது. இதன் செயல் மையமாக இந்தியத் தலைநகர் புது தில்லி விளங்குகின்றது.
இந்திய அரசின் சின்னம் | |
உருவாக்கம் | 28 ஆகத்து 1833; 190 ஆண்டுகள் முன்னர் (1833-08-28) |
---|---|
தற்போதைய அரசியலமைப்பு | 1950 இன் இந்திய அரசியலமைப்பு |
நாடு | இந்தியா |
வலைத்தளம் | india |
சட்டம் | |
சட்டமன்றம் | நாடாளுமன்றம் |
கூடும் இடம் | நாடாளுமன்ற மாளிகை |
செயல் | |
ஆட்சியாளர் | இந்தியப் பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழுவுடன் இந்தியக் குடியரசுத் தலைவர் |
தலைமையகம் | மத்திய செயலகம் |
அமைச்சரவை துறைகள் | மத்திய மந்திரிகள் குழு, இந்திய மத்திய அரசு அமைச்சகங்கள் |
நீதி | |
நீதிமன்றம் | இந்திய உச்ச நீதிமன்றம் |
தலைமை நீதிபதி | இந்தியத் தலைமை நீதிபதி |
இந்தியக் குடிகளைக் காக்கும் அடிப்படைச் சட்டங்களான சமூக நலன் மற்றும் குற்றவியல் சட்ட வடிவுகள், அவற்றினை இயற்றிய நாடாளுமன்றம் போன்றவைகளை இந்திய குடிகளைக் காக்க அமைக்கப்பெற்றவைகளாகும். இதன் கூட்டாட்சி மற்றும் மாநில தன்னாட்சி கோட்பாட்டின்படி அதன் மாநில அரசுகள் இச்சட்டவடிவுகளை, ஆளுமைகளை, நீதிபரிபாலணைகள் செயற்படுத்துவதற்கான கிளை அமைப்புகளாக செயற்படுகின்றன.
இதன் சட்ட முறைகளான கூட்டாட்சி மற்றும் மாநில தன்னாட்சிக் கொள்கையை செயற்படுத்தும் விதமாக ஆங்கிலத்தை பொது மொழியாகக் கொண்டு செயற்படுகின்றது.
பன்னாட்டு நீதிமன்றத்தின் நீதிபரிபாலனத்தில் இந்தியா இணக்கம் கொண்டுள்ளதால் இந்தியா சில பல ஒதுக்கீடுகளையும் பெற்றுள்ளது. அதன் அதிகாரப் பரவலாக்கல், இந்தியாவின் ஊராட்சி மன்றம் என்ற உள்ளாட்சி அமைப்பின் மூலம் கடைக்கோடியில் உள்ள கிராமங்கள் வரை சென்றடைகிறது.