இந்திய உச்ச நீதிமன்றம்
இந்தியாவின் தலைமை நீதிமன்றம் / From Wikipedia, the free encyclopedia
இந்திய உச்ச நீதிமன்றம் (Supreme Court of India) இந்திய அரசியல் சட்டப்பிரிவு அத்தியாயம் 4, பிரிவு 5-இன் கீழ் இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நீதிமன்றமாகவும் கீழ்நீதிமன்றங்களின், உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யும் நீதிமன்றமாகவும் செயல்படுகின்றது. இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதி விசாரணைக்கு உட்பட்ட அதிகாரங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் 124 முதல் 147-இன் கீழ் எழுதப்பட்டுள்ளன.
இந்திய உச்ச நீதிமன்றம் Supreme Court of India | |
---|---|
நிறுவப்பட்டது | அக்டோபர் 1, 1937; 86 ஆண்டுகள் முன்னர் (1937-10-01) (இந்தியாவின் கூட்டு நீதிமன்றம்) 28 சனவரி 1950; 74 ஆண்டுகள் முன்னர் (1950-01-28) (இந்திய உச்ச நீதிமன்றம்)[4] |
அமைவிடம் | புது தில்லி |
புவியியல் ஆள்கூற்று | 28.622237°N 77.239584°E / 28.622237; 77.239584 |
குறிக்கோளுரை | यतो धर्मस्ततो जयः॥ அறம் உள்ளவிடத்து வெற்றி உள்ளது. |
நியமன முறை | நிர்வாக தேர்வு (கோட்பாடுகளுக்கு உட்பட்டது) |
அதிகாரமளிப்பு | இந்திய அரசியலமைப்பு |
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடு | இந்தியக் குடியரசுத் தலைவர் (தூக்கு தண்டனை உட்பட தண்டனையை நீக்க மட்டும்) |
நீதியரசர் பதவிக்காலம் | 65 அகவை |
இருக்கைகள் எண்ணிக்கை | 34 (33+1) |
வலைத்தளம் | supremecourtofindia.nic.in |
இந்தியத் தலைமை நீதிபதி | |
தற்போதைய | தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் |
பதவியில் | 9 நவம்பர் 2022 முதல் |
இஃது ஒரு மேல்முறையீட்டு நீதிமன்றமாகையால், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிலபல ரிட் மனுக்களையும் மனித உரிமை மீறல் வழக்குகளையும் அவசர மனுவாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. உச்ச நீதிமன்றம் தன்னுடைய முதல் அமர்வை சனவரி 28, 1950-இல் தொடங்கியது. அன்று முதல் 24,000 மேற்பட்ட வழக்குகளுக்குத் தீர்ப்புரைகள் வழங்கியுள்ளது .