![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e3/St-thomas-aquinas.jpg/640px-St-thomas-aquinas.jpg&w=640&q=50)
தாமஸ் அக்குவைனஸ்
From Wikipedia, the free encyclopedia
புனித தாமஸ் அக்குவைனஸ் அல்லது தமிழில் ஆக்வினாவின் தூய தோமா (Saint Thomas Aquinas, 1225 – மார்ச் 7, 1274) ஒரு இத்தாலிய கத்தோலிக்க மதகுரு.[1][2] டொமினிக்கன் பிரிவைச்சேர்ந்த இவர், ஒரு மெய்யியலாளரும், இறையியலாளரும் ஆவார். அக்குவைனஸ் என்பது இவரது இடத்தின் பெயராகையால் இவரைப் பெரும்பாலும் தாமஸ் என்றே அழைப்பர். இயற்கை இறையியலின் முன்னணிப் பரப்புரையாளராக இருந்ததுடன், இவர் மெய்யியல், இறையியல் என்பவற்றின் தோமியச் சிந்தனைப் பிரிவின் தந்தையும் ஆவார்.
ஆக்வினாவின் தூய தோமா Saint Thomas Aquinas | |
---|---|
![]() கார்லோ கிரிவெலியின் நூலொன்றிலுள்ள செயிண்ட் தாமஸ் அக்குவைனசின் படம். | |
மறைவல்லுநர் | |
பிறப்பு | 1225 ஆக்வினா, சிசிலி |
இறப்பு | 7 மார்ச் 1274 (பொசனோவா மடாலயம், லாசியோ, இத்தாலி) |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்கம், ஆங்கிலிக்கம் |
புனிதர் பட்டம் | 18 ஜூலை 1323, ரோம் by திருத்தந்தை இருபத்தி இரண்டாம் யோவான் |
திருவிழா | ஜனவரி 28 |
சித்தரிக்கப்படும் வகை | புத்தகம், கோவில், சூரியன் |
பாதுகாவல் | கத்தோலிக்க கிறிஸ்தவ கல்வி நிலையங்கள் |
தாமஸ் அக்குவைனஸ் | |
---|---|
காலம் | மத்தியகால மெய்யியல் |
பகுதி | மேல்நாட்டு மெய்யியலாளர் |
பள்ளி | Scholasticism, தோமியத்தின் நிறுவனர் |
முக்கிய ஆர்வங்கள் | மீவியற்பியல் (incl. இறையியல்), தருக்கம், மனம், அறிவாய்வியல், நன்னெறி, அரசியல் |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
| |
கத்தோலிக்கத் திருச்சபை, குருமாருக்கான கல்வி பயிலுபவர்களுக்கான ஒரு மாதிரியாக இவரைப் போற்றியது. திருச்சபையால் மறைவல்லுனர் (Doctor of the Church) என்ற பட்டம் அளிக்கப்பட்ட முப்பத்து மூவரில், மிகச் சிறந்தவராக இவர் கருதப்பட்டார். இதன் காரணமாகப் பல கல்வி நிறுவனங்கள் இவருடைய பெயருடன் தொடங்கப்பட்டன.[3]
தாமஸ் அக்வினஸ் கத்தோலிக்க திருச்சபையின் மிகப் பெரிய இறையியலாளர்களாகவும் தத்துவவாதிகளாகவும் கருதப்படுகிறார். "இந்த (டொமினிகன்) ஆணை திருச்சபை தாமஸ் போதிக்கும் போதனை பிரகடனத்தை அறிவித்தபோது புதிய புத்துயிர் பெற்றது. அந்த டாக்டர், கத்தோலிக்க பள்ளிகளின் ஆசிரியர் மற்றும் புரவலர் சிறப்புத் துறவிகளால் புகழப்படுகிறார்.[4] என போப் பெனடிக்ட் XV அறிவித்தார். 'மேற்கத்திய உலகின் சிறந்த பெரிய தத்துவவாதிகளில் ஒருவர்' என்று ஆங்கில தத்துவஞானி அந்தோனி கென்னி கருதுகிறார்.[5]