இப்னு சீனா
இடைக்கால பாரசீக மருத்துவர், அறிவியல் விற்பன்னர் / From Wikipedia, the free encyclopedia
இபின் சீனா (Ibn Sina) அல்லது அவிசென்னா (Avicenna) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் அபு அலி அல்-ஹுசெய்ன் இபின் அல்லா இபின் சீனா (கிபி 980 - கிபி 1037) பாரசீகத்தைச் சேர்ந்த, பல்துறை அறிவு கொண்டவரும், புகழ்பெற்ற மருத்துவரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் வானியல், வேதியியல், நிலவியல், ஏரணம், தொல்லுயிரியல், கணிதம், இயற்பியல், கவிதை, உளவியல், அறிவியல் போன்ற பல துறைகளிலும் வல்லுனராக இருந்ததுடன், ஒரு போர்வீரராகவும், அரசியலாளராகவும், ஆசிரியராகவும் இருந்தார்.
பாரசீக அறிஞர் | |
---|---|
![]() | |
பெயர்: | அபு அலி அல்-ஹுசெய்ன் இபின் அல்லா இபின் சீனா |
பதவி: | Sharaf al-Mulk, Hujjat al-Haq, Sheikh al-Rayees |
பிறப்பு: | 980 CE |
இறப்பு: | 1037 CE |
இனம்: | பாரசீகர் |
பகுதி: | மத்திய ஆசியா மற்றும் பாரசீகம் |
Maddhab: | பன்னிருவர், ஷியா முஸ்லிம்[1] |
மரபு: | அவிசின்னியம்[2] |
முதன்மை ஆர்வம்: | மருத்துவம், வேதியியல், வானியல், இஸ்லாமிய நெறிமுறைகள், தொடக்க இஸ்லாமிய மெய்யியல், இஸ்லாமிய ஆய்வுகள், மெய்யியலில் தருக்கம், புவியியல், கணிதம், உளவியல் சிந்தனை, இயற்பியல், அரபிக் கவிதை, பாரசீகக் கவிதை, அறிவியல், கலாம், தொல்லுயிரியலாளர் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கரு: |
நவீன மருத்துவத்தின் தந்தை, அவிசென்னியம் மற்றும் அவிசென்னியத் தருக்கத்தின் நிறுவனர், உளப்பகுப்பாய்வின் முன்னோடி, நிலவியலில் முக்கிய பங்களிப்பு. |
செல்வாக்கு: | ஹிப்போகிரட்டீஸ், சுஷ்ருதா, சாரகா, அரிஸ்ட்டாட்டில், காலென், பிளாட்டினஸ், நியோபிளேட்டோனியம், இந்தியக் கணிதம், முஹம்மத், ஜபார் அல்-சாதிக், வாசில் இபின் அத்தா, அல்-கிண்டி, அல்-பராபி, அல்-ராசி, அல்-பிரூனி, முஸ்லிம் மருத்துவர்கள் |
செல்வாக்குக்கு உட்பட்டோர்: |
அல்-பிருனி, ஓமர் கய்யாம், அல்காசெல், அபூபக்கர், அவெரோஸ், நாசிர் அல்-டின், இபின் அல்-நாபிஸ், அவெரோயிசம், ஆல்பர்ட்டஸ் மக்னஸ், டுன்ஸ் ஸ்லோட்டஸ், தாமஸ் அக்குவைனாஸ், ஜான் புரிடான், கியம்பட்டிஸ்டா பெனடெட்டி, கலிலியோ கலிலி, வில்லியம் ஹார்வி, ரேனே டெஸ்கார்ட்டஸ், ஸ்பினோசா |
இபின் சீனா, ஏறத்தாழ 450 நூல்களை எழுதியுள்ளார். இவற்றுள் 240 நூல்களே இப்போது கிடைக்கின்றன. இவற்றுள் 150 நூல்கள் மெய்யியல் சார்ந்தவை, 40 மருத்துவ நூல்கள்.
இவர் முன்னை நவீன மருத்துவத் தந்தையாகப் போற்றப்படுகிறார்.[3][4][5]. முக்கியமாக உடலியக்கவியல் ஆராய்ச்சியில் முறைப்படியான பரிசோதனைகளையும், அளவீடுகளையும் முதன்முறையாகப் பயன்படுத்தினார்.[6]. தொற்றுநோய்களைக் கண்டறிந்தும், அவை தொற்றும் முறைகளை வகைப்படுத்தியும், அவற்றைக் கட்டுபடுத்தும் முறைகளைக் கண்டறிந்தும் அக்கால மருத்துவத் துறைக்குப் பெரும் பங்களிப்புகளைச் செய்தார்.[7]
இவர் 370/980இல் புகாராவில் அவரது தாய் வீட்டுக்கு அருகில் இருந்த அஃபிஷானாவில் பிறந்தார். அவரது தாய்மொழி பாரசீகம். மருத்துவராகவும் மீஇயற்பியலாராகவும் விளங்கிய அவர் மாபெரும் பாரசீகச் சிந்தனையாளர் ஆவார். அவிசென்னாவின் பெயர் இரானிய மெய்யியலார் காலவரிசையில் முதலில் வைக்கப்பட்டிருந்தாலும் அண்மைய ஆய்வுகள், இவரதையொத்த அல்லது சற்றும் குறையாத அமைப்புடைய இசுமிலி மெய்யியல் அமைப்புகள் முன்பே நிலவியதைக் கண்டுபிடித்துள்ளன. இவர் பலதுறையறிஞர், அரசியலாளர், ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் [[இசுலாமியப் பொற்காலம் சார்ந்த மிகச்சிறந்த சிந்தனையாளராகவும் எழுத்தாளராகவும் மதிப்பிடப்பட்டவர்.[8]
மிகவும் பெயர்பெற்ற அவரது இரண்டு நூல்கள் பின்வருமாறு:
- நோயாற்றுதல் நூல் –இது ஒரு மெய்யியல் மற்றும் அறிவியல் களஞ்சியம்
- மருத்துவ நெறிமுறைகள் –இது ஒரு மருத்துவக் களஞ்சியம்.[9][10][11]
இது செந்தர மருத்துவப் பாடநூலாக பல இடைக்காலப் பல்கலைக் கழகங்களில் விளங்கியது.[12] அது 1650 வ்ரை பயன்பாட்டில் இருந்தது.[13] அவிசென்னாவின் ’மருத்துவ நெறிமுறைகள்’ நூல் 1973இல் நியூ யார்க்கில் மறுஅச்சடிக்கப்பட்டது.[14]
மருத்துவம், மெய்யியல் தவிர, அவிசென்னாவின் புலமைப்பரப்பில் இடைக்கால இசுலாமிய வானியலும் இடைக்கால இசுலாமிய வேதியியலும் இடைக்கால இசுலாமியப் புவியியலும் புவிப்பரப்பியலும் நிலவரையியலும் இடைக்கால இசுலாமிய உளவியலும் இடைக்கால இசுலாமிய இறையியலும் இடைக்கால இசுலாமிய மெய்யியலும் ஏரணவியலும் இடைக்கால இசுலாமியக் கணிதவியலும் இடைக்கால இசுலாமிய இயற்பியலும் இசுலாமிய இடைக்காலக் இசுலாமியக் கவிதையும் அடங்கும்.[15]