சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி
இந்திய விடுதலை வீரர், அரசியலாளர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர், எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி (Chakravarti Rajagopalachari, 10 திசம்பர் 1878 – 25 திசம்பர் 1972) இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி, மற்றும் எழுத்தாளர் ஆவார்.[1] இவர் சுருக்கமாக ராஜாஜி என்றும் மூதறிஞர் ராஜாஜி என்றும் அழைக்கப்பட்டவர், சி.ஆர் என்று அறியப்பட்டவர். இந்தியாவின் கடைசித் தலைமை ஆளுநராகப் பணியாற்றியவர்.[2] அத்துடன் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர், சென்னை மாகாண முதல்வர், சென்னை மாநில முதலமைச்சர், மேற்கு வங்க ஆளுநர், இந்திய ஒன்றியத்தின் உட்துறை அமைச்சர் போன்ற பல பதவிகளிலும் பணியாற்றியுள்ளார். பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் இந்தியர்களில் ஒருவர். பிற்காலத்தில் சவகர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக 1959இல் சுதந்திராக் கட்சியது தொடங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர். அணுவாற்றல் போர்க்கருவிகளைக் குறைக்க போராடியவர்.
ராஜாஜி | |
---|---|
இந்திய தபால்தலையிலிருந்து வெட்டப்பட்டது | |
இந்தியத் தலைமை ஆளுநர் | |
பதவியில் 21 சூன் 1948 – 26 சனவரி 1950 | |
ஆட்சியாளர் | ஆறாம் ஜார்ஜ் |
பிரதமர் | சவகர்லால் நேரு |
முன்னையவர் | பர்மாவின் மவுண்ட்பேட்டன் பிரபு |
பின்னவர் | இராசேந்திர பிரசாத் குடியரசுத் தலைவராக |
சென்னை மாநில முதல்வர் | |
பதவியில் 10 ஏப்ரல் 1952 – 13 ஏப்ரல் 1954 | |
ஆளுநர் | சிறீ பிரகாசா |
முன்னையவர் | பூ. ச. குமாரசுவாமி ராஜா |
பின்னவர் | காமராசர் |
உட்துறை அமைச்சர் | |
பதவியில் 26 திசம்பர் 1950 – 25 அக்டோபர் 1951 | |
பிரதமர் | சவகர்லால் நேரு |
முன்னையவர் | வல்லபாய் பட்டேல் |
பின்னவர் | கைலாசுநாத் கச்சு |
மேற்கு வங்க ஆளுநர் | |
பதவியில் 15 ஆகத்து 1947 – 21 சூன் 1948 | |
முதல்வர் | பிரபுல்லா சந்திரகோசு பிதான் சந்திர ராய் |
முன்னையவர் | பிரெடெரிக் பரோசு |
பின்னவர் | கைலாசுநாத் கச்சு |
சென்னை மாகாண முதலமைச்சர் | |
பதவியில் 14 சூலை 1937 – 9 அக்டோபர் 1939 | |
ஆளுநர் | எர்சுக்கின் பிரபு |
முன்னையவர் | கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு |
பின்னவர் | த. பிரகாசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1878-12-10)10 திசம்பர் 1878 தொரப்பள்ளி, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (இன்றைய தமிழ்நாட்டில்) |
இறப்பு | 25 திசம்பர் 1972(1972-12-25) (அகவை 94) சென்னை, தமிழ்நாடு |
அரசியல் கட்சி | சுதந்திராக் கட்சி (1959–1972) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (1957 இற்கு முன்னர்) இந்திய தேசிய சனநாயக காங்கிரசு (1957–1959) |
துணைவர் | அலமேலு மங்களம்மா (1897–1916) |
முன்னாள் கல்லூரி | மத்திய கல்லூரி மாநிலக் கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் எழுத்தாளர் அரசியல்வாதி |
விருதுகள் | பாரத ரத்னா (1954) |