கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு (தெலுங்கு:కూర్మా వేంకటరెడ్డి నాయుడు, ஆங்கிலம்:Kurma Venkata Reddy Naidu, 1875-1942) சென்னை மாகாணத்தின் முந்நாள் பிரதமரும்[1] (முதல்வர்), நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவருமாவார். 1919 இல் நீதிக்கட்சியில் இணைந்த நாயுடு 1920-23 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் வளர்ச்சித் துறை அமைச்சராகப் பணியாற்றினார். பின்னர் 1929-32 இல் தென்னாப்பிரிக்காவிற்கான பிரித்தானிய முகவராகவும், 1934-37 இல் இந்திய வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். 1936 சென்னை மாகாண ஆளுநர் எர்ஸ்கைன் பிரபு விடுப்பில் சென்ற போது அவருக்குப் பதிலாக தற்காலிக சென்னை ஆளுநராகப் பணியாற்றினார். 1937 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரசு ஆட்சியமைக்க மறுத்ததால் ஏற்பட்ட இழுபறிநிலையின் போது மூன்று மாதங்கள் சென்னை மாகாணத்தின் இடைக்கால அரசின் பிரதமராகப் பதவி வகித்தார். 1940-42 இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பணியாற்றினார்.[2][3][4][5][6][7]
சர் கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு | |
---|---|
1940-41 இல் ரெட்டி நாயுடு | |
சென்னை மாகாணத்தின் பிரதமர் | |
பதவியில் ஏப்ரல் 1, 1937 – ஜூலை 14, 1937 | |
ஆளுநர் | எர்ஸ்கைன் பிரபு |
முன்னையவர் | பொபிலி அரசர் |
பின்னவர் | சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி |
சென்ன மாகாண ஆளுநர் (தற்காலிகம்) | |
பதவியில் ஜூன் 18, 1936 – அக்டோபர் 1, 1936 | |
பிரதமர் | பொபிலி அரசர், பி. டி. ராஜன் |
இந்திய வைஸ்ராயின் நிர்வாகக் குழு உறுப்பினர் | |
பதவியில் 1934–1937 | |
தலைமை ஆளுநர் | வில்லிங்டன் பிரபு லின்லித்கோ பிரபு |
தென்னாப்பிரிக்காவிற்கான பிரித்தானிய ஏஜன்ட் | |
பதவியில் 1929–1932 | |
ஆட்சியாளர் | ஐந்தாம் ஜார்ஜ் |
தலைமை ஆளுநர் | ஹாலிஃபாக்ஸ் பிரபு வில்லிங்டன் பிரபு |
முன்னையவர் | வி. எஸ். ஸ்ரீநிவாச சாஸ்திரி |
பின்னவர் | குன்வர் மகாராஜ் சிங் |
வளர்ச்சித் துறை அமைச்சர், சென்னை மாகாணம் | |
பதவியில் 1920–1923 | |
பிரதமர் | சுப்பராயலு ரெட்டியார் பனகல் அரசர் |
ஆளுநர் | வில்லிங்டன் பிரபு |
பின்னவர் | டி. என். சிவஞானம் பிள்ளை |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1875 ஏலூரு , ஆந்திரா , இந்தியா |
இறப்பு | 1942 |
அரசியல் கட்சி | நீதிக்கட்சி |