கருநாடகம்
இந்திய மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
கருநாடகம் (Karnāṭaka, கன்னடம்: ಕರ್ನಾಟಕ, கர்நாடகம்) என்பது இந்தியாவின் தென் பகுதியில் உள்ள, ஒரு மாநிலமாகும். மாநிலங்கள் மறுசீரமைப்பு சட்டத்தின்கீழ் இம்மாநிலம் நவம்பர் 1, 1956 அன்று உருவாக்கப்பட்டது. மைசூர் மாநிலம் என்று அழைக்கப்பட்டு வந்த இம்மாநிலம் 1973-இல் கர்நாடகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கருநாடகம் | |
---|---|
மேல், இடமிருந்து வலமாக: மைசூர் அரண்மனை, பட்டடக்கல், பிருந்தாவன் தோட்டம், போசளப் பேரரசு சின்னம், சிவசமுத்திரம் அருவி மற்றும் விருபாட்சர் கோயில் | |
பண்: "கர்நாடக மாநிலப் பண்" | |
கருநாடகாவின் வரைபடம் | |
ஆள்கூறுகள் (பெங்களூரு): 12.97°N 77.50°E / 12.97; 77.50 | |
நாடு | இந்தியா |
உருவாக்கம் | 1 நவம்பர் 1956 (மைசூரு மாநிலத்தில் இருந்து) |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | பெங்களூரு |
அரசு | |
• நிர்வாகம் | கர்நாடக அரசு |
• ஆளுநர் | தவார் சந்த் கெலாட் |
• முதலமைச்சர் | சித்தராமையா (காங்கிரஸ் கட்சி) |
• சட்டமன்றம் | ஈரவை |
• நாடாளுமன்ற தொகுதிகள் | மாநிலங்களவை 12 மக்களவை 28 |
• உயர் நீதிமன்றம் | கருநாடக உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,91,791 km2 (74,051 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 7-ஆவது |
உயர் புள்ளி | 1,925 m (6,316 ft) |
தாழ் புள்ளி | 0 m (0 ft) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 6,11,30,704 |
• தரவரிசை | 8-ஆவது |
• அடர்த்தி | 320/km2 (830/sq mi) |
இனம் | கன்னடிகா |
GDP (2018–19) | |
• Total | ₹14.08 இலட்சம் கோடி (US$180 பில்லியன்) |
• Per capita | ₹1,74,551 (US$2,200) |
நேர வலயம் | ஒசநே+05:30 (IST) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-KA |
வாகனப் பதிவு | KA |
அதிகாரப்பூர்வ மொழிகள் | கன்னடம்[5] |
HDI (2017) | 0.682[6] medium · 18-ஆவது |
Literacy (2011) | 75.36%[7] |
பாலின விகிதம் (2011) | 973 ♀/1000 ♂[7] |
இணையதளம் | www |
கருநாடக மாநிலமானது மேற்கில் அரபுக் கடல், வட மேற்கில் கோவாவையும், வடக்கில் மராட்டிய மாநிலத்தையும், வடகிழக்கில் தெலுங்கானாவையும், கிழக்கில் ஆந்திரப் பிரதேசத்தையும், தென் கிழக்கில் தமிழ்நாட்டையும், தென் மேற்கில் கேரளாவையும், எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம் மாநிலம் 74,122 சதுர மைல்கள், அதாவது 191,976 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் 5.83% ஆகும். 30 மாவட்டங்களைக் கொண்டுள்ள இம்மாநிலம் பரப்பளவில் இந்தியாவின் எட்டாவது மிகப் பெரிய மாநிலமாகத் திகழ்வதுடன் மக்கள் தொகையில் இந்திய அளவில் ஒன்பதாவது இடத்தையும் கொண்டுள்ளது. கன்னடம் ஆட்சி மொழியாகவும் பெருமளவு பேசப்படும் மொழியாகவும் உள்ளது.
கருநாடகம் என்ற பெயருக்குப் பல வித சொல்லிலக்கணம் பரிந்துரைக்கப்பட்டாலும், 'கரு' மற்றும் 'நாடு' என்ற கன்னட வார்த்தைகளில் இருந்துதான் அது உருவாக்கப்பட்டுள்ளது என்பது பொதுவான கருத்து. இந்த வார்த்தைகளின் பொருள் மேட்டு நிலம் என்பதாகும். ஆங்கிலேயர்கள் இம்மாநிலத்தை கர்நாடிக் என்றும் சில சமயங்களில் கர்நாடக் என்றும் குறிப்பிட்டனர்.
பழங்கற்கால பாரம்பரியத்தைக் கொண்டுள்ள கருநாடகம், தொன்மையான மற்றும் நடு கால இந்தியாவின் சில வலிமை வாய்ந்த பேரரசுகளின் தாயகமாகவும் திகழ்ந்துள்ளது. இப்பேரரசுகளால் சார்பகண்ட மெய்ப்பொருள் அறிவச்செம்மல்களும், இசை வல்லுநர்களும் சமய, பொருளாதார மற்றும் இலக்கிய இயக்கங்களைத் தொடங்கினர். அவை இன்றுவரை நிலைத்திருப்பது குறிப்பிடத் தகுந்தது. இந்தியாவிலேயே கன்னட மொழி எழுத்தாளர்கள்தான் அதிக அளவில் ஞானபீட விருது பெற்றுள்ளார்கள். மாநிலத் தலைநகராக விளங்கும் பெங்களூரு, இந்தியா சந்தித்து வரும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் முன்னோடியாக உள்ளது.