![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8d/Mysore_Palace_S-KA-748.jpg/640px-Mysore_Palace_S-KA-748.jpg&w=640&q=50)
மைசூர் அரண்மனை
From Wikipedia, the free encyclopedia
மைசூர் அரண்மனை (Mysore Palace) அல்லது அம்பாவிலாஸ் எனப்படும் இது இந்தியாவின் கர்நாடக மாநிலம், மைசூரில் அமைந்துள்ள அரண்மனை ஆகும். இது 1897-ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்ட துவங்கப்பட்டது. 1912-ம் ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.[1][2]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8d/Mysore_Palace_S-KA-748.jpg/640px-Mysore_Palace_S-KA-748.jpg)
ஆரம்பத்தில் யது வம்ச வொடையார் குடும்பத்தினரால் விஜயநகரப் பேரரசின் கீழ் சிற்றரசாக 1565 வரையிலும், பின் விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சி வரை ஆளப்பட்டு வந்தது. பின்னர் பல சிற்றரசுகள் தென்னிந்தியாவில் விடுதலை பெற்ற காலத்தில் மைசூரும் விடுதலை பெற்றது. நரசராஜ வொடையார் மற்றும் சிக்க தேவராய வொடையார் ஆகிய அரசர்களின் கீழ் தற்போதைய தெற்கு கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகள் மைசூர் பேரரசின் கீழ் கொண்டு வரப்பட்டு இப்பகுதியில் ஒரு பலமான பேரரசாக அமைக்கப்பட்டது.