கர்நாடக மாநிலப் பண்
From Wikipedia, the free encyclopedia
ஜய பாரத ஜனனிய தனுஜாதெ என்பது குவெம்பு என்ற கன்னடப் புலவர் 1928 இல் எழுதிய பாடல். இது இந்தியாவின் கர்நாடகாவின் மாநில கீதமாக 2004 இல் ஏற்கப்பட்டது. [1] இப்பாடலில் இந்தியாவின் மகளான கர்நாடகா தன் மதிப்பை காத்துக்கொள்ளும் அதே வேளை, பிற மாநிலங்களுடன் அமைதியான உறவை மேற்கொள்வதாக குவெம்பு எழுதியுள்ளார். மாநிலத்தில் அனைத்து நிகழ்வின்போதும் இப்பாடலை இசைக்க வேண்டும் என்று கர்நாடக அரசு ஆணையிட்டுள்ளது. பாடலின்போது, அங்கிருப்போர் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது