ம. கோ. இராமச்சந்திரன்
இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் / From Wikipedia, the free encyclopedia
எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், 17 சனவரி 1917 – 24 திசம்பர் 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.
எம். ஜி. இராமச்சந்திரன் | |
---|---|
![]() புரட்சித் தலைவர் டாக்டர். எம். ஜி. இராமச்சந்திரன் நினைவு முத்திரை | |
தமிழ்நாடு முதலமைச்சர் | |
பதவியில் 9 சூன் 1980 – 24 திசம்பர் 1987 | |
முன்னையவர் | குடியரசுத் தலைவர் ஆட்சி |
பின்னவர் | இரா. நெடுஞ்செழியன் |
பதவியில் 30 சூன் 1977 – 17 பெப்ரவரி 1980 | |
முன்னையவர் | ஆளுநர் ஆட்சி |
பின்னவர் | ஆளுநர் ஆட்சி |
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் | |
பதவியில் 17 அக்டோபர் 1986 – 24 டிசம்பர் 1987 | |
முன்னையவர் | எஸ். இராகவானந்தம் |
பின்னவர் | இரா. நெடுஞ்செழியன் |
பதவியில் 17 அக்டோபர் 1972 – 22 சூன் 1978 | |
முன்னையவர் | நிலை நிறுவப்பட்டது |
பின்னவர் | இரா. நெடுஞ்செழியன் |
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் | |
பதவியில் 27 சூலை 1969 – 10 அக்டோபர் 1972 | |
கட்சியின் தலைவர் | மு. கருணாநிதி |
பொதுச்செயலாளர் | இரா. நெடுஞ்செழியன் |
தென்னிந்திய கலைஞர்கள் சங்கம் தலைவர் | |
பதவியில் 1957–1959 | |
முன்னையவர் | என். எஸ். கிருஷ்ணன் |
பின்னவர் | அஞ்சலி தேவி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் 17 சனவரி 1917 நாவலப்பிட்டி, கண்டி மாவட்டம், மத்திய மாகாணம், பிரித்தானிய சிலோன் (தற்போது இலங்கை) |
இறப்பு | 24 திசம்பர் 1987(1987-12-24) (அகவை 70) மதராசு (தற்போது சென்னை), தமிழ்நாடு, இந்தியா |
இளைப்பாறுமிடம் | எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா நினைவிடம் |
அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர்(கள்) | தங்கமணி (இறப்பு 1942) சதானந்தவதி (இறப்பு 1962) வி. என். ஜானகி (இறப்பு 1996) |
உறவினர்கள் | உடன்பிறந்தோர் :- 1)எம்.ஜி.சக்கரபாணி, 2)எம்.ஜி.காமாட்சி, 3)எம்.ஜி.சுமதிரா, 4)எம்.ஜி.பாலகிருஷ்ணன் |
வேலை | நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர், அரசியல்வாதி |
விருதுகள் | பாரத ரத்னா (1988) |
எம். ஜி. சக்கரபாணிக்குத் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார்.[1] காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.[2] 1936 இல் சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, இவரின் நண்பர் கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, அதன் பாெதுச்செயலாளாராக ஆக்கி, சட்டமன்ற தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார்.
இவர் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர்.[3]