தமிழகத் திரைப்படத்துறை
From Wikipedia, the free encyclopedia
கோலிவுட் (Tamil cinema) என்று அழைக்கப்படும் தமிழ்த் திரைப்படத்துறை எனப்படுவது தமிழ் நாட்டில் இருந்து இயங்கும் தமிழ் மொழித் திரைப்படத்துறை ஆகும்.[3] இந்தியாவில் இந்தி திரைத்துறைக்கு அடுத்து பரவலாக அறியப்படும் திரைத்துறை ஆகும். 1980கள் வரை சென்னையில் கோடம்பாக்கத்தில் இருந்த திரைப்படத் தயாரிப்பு வசதிகளை முன்னிட்டு பெரும்பாலான மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களும் இங்கிருந்தே தயாரிக்கப்பட்டன. இதனால் தமிழ்த் திரைப்படத் துறை கோலிவுட் எனவும் அழைக்கப்படுகிறது.[4][5][6]
தமிழகத் திரைப்படத்துறை | |
---|---|
திரைகளின் எண்ணிக்கை | 1671(தமிழ்நாடு) மற்றும் (பாண்டிச்சேரி)[1] |
முதன்மை வழங்குநர்கள் | ஏவிஎம் லைக்கா தயாரிப்பகம் ஸ்டுடியோ கிரீன் மெட்ராஸ் டாக்கீஸ் 2டி என்டேர்டைன்மென்ட் சன் படங்கள் தேனாண்டாள் படங்கள் வி.கிரியேஷன்ஸ் வுண்டர்பார் பிலிம்ஸ் ரெட் ஜெயண்ட் மூவிகள் ஆஸ்கர் பிலிம்ஸ் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் |
தயாரித்த முழுநீளத் திரைப்படங்கள் (2017) | |
மொத்தம் | 198 |
நிகர நுழைவு வருமானம் (2013)[2] | |
தேசியத் திரைப்படங்கள் | இந்தியா: ₹1,550 கோடி (US$190 மில்லியன்) |
முதல் தமிழ் ஊமைத் திரைப்படம் 1918 ஆம் ஆண்டில் இயக்குநர் ஆர். நடராஜ முதலியார் என்பவர் இயக்கிய கீசக வதம் என்ற திரைப்படம் ஆகும். முதல் பேசும் படமான காளிதாஸ் என்ற திரைப்படம் 1931 ஆம் ஆண்டில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது. இந்த திரைப்படத்தை எச். எம். ரெட்டி என்பவர் இயக்கியுள்ளார்.
இந்தியாவில் இருந்து வந்த தமிழ் திரைப்படங்கள் சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, ஜப்பான், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஓசியானியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா போன்ற பிற நாடுகளில் திரையிடுவதன் மூலம் உலகதிரைப்பட துறையில் தனக்கான ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ளது.