ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்
தேசீயத் தொண்டர் சங்கம் / From Wikipedia, the free encyclopedia
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (Rashtriya Swayamsevak Sangh, தேசியத் தொண்டர் அணி, ஆர் எஸ் எஸ்) இந்தியாவில் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பு அல்லது ஆர் எஸ் எஸ் (RSS, தேசிய தொண்டர் அணி) என அழைக்கப்படுகின்றது. இது 1925 செப்டம்பர் 27ம் தேதி விஜயதாசமி அன்று நிறுவியவர்கள் கே. பி. ஹெட்கேவர், பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே, கணேஷ் தாமோதர் சாவர்க்கர், விநாயக் தாமோதர் சாவர்க்கர் மற்றும் இலட்சுமன் வாமன் பரஞ்பே ஆவர்.[3].
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
राष्ट्रीय स्वयंसेवक संघ | |
![]() ஆர் எஸ் எஸ் இயக்கக் கொடி | |
சுருக்கம் | RSS / ஆர் எஸ் எஸ் |
---|---|
உருவாக்கம் | 27 செப்டம்பர் 1925 (98 ஆண்டுகள் முன்னர்) (1925-09-27) |
நிறுவனர் | கே. பி. ஹெட்கேவர், பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே, கணேஷ் தாமோதர் சாவர்க்கர், விநாயக் தாமோதர் சாவர்க்கர் மற்றும் இலட்சுமன் வாமன் பரஞ்பே |
வகை | இந்திய தேசியத்தை வலியுறுத்தும் தேசபக்த தொண்டர்கள் சங்கம் |
நோக்கம் | இந்து தேசியம் |
தலைமையகம் | நாக்பூர், மகாராஷ்டிரம், இந்தியா |
ஆள்கூறுகள் | 21.04°N 79.16°E / 21.04; 79.16 |
சேவை பகுதி | இந்தியா |
உறுப்பினர்கள் | 5-6 மில்லியன்[1][2] 50,000 கிளைகள் (shakhas)[1] |
ஆட்சி மொழி | இந்தி |
அகில இந்தியத் தலைவர் | மோகன் பாகவத் |
முக்கிய நபர்கள் | சுரேஷ் பையாஜி ஜோஷி (பொதுச் செயலாளர்) |
சார்புகள் | சங்கப் பரிவார் |
செயல்நோக்கம் | "சுயநலமின்றி தாய் நாட்டிற்கு சேவை செய்தல்" |
வலைத்தளம் | www |
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9b/Dr._Hedgevar.jpg/640px-Dr._Hedgevar.jpg)
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cc/Rashtriya_Swayamsewak_Sangh_drill.jpg/640px-Rashtriya_Swayamsewak_Sangh_drill.jpg)
சங்கமானது ஆரம்பிக்கப்பட்ட பத்து வருடங்களுக்குள் வடஇந்தியாவில் பெற்ற செல்வாக்கு மிக அதிகம். இதற்கு மிக முக்கிய காரணம், சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கி "இந்து" என்ற அடையாளத்துடன் ஒன்று சேர்வோம் என்பதாகும்.
ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இந்தியாவில் மட்டுமில்லது வெளிநாடுகளிலும் வேறு சில பெயர்களால் இயங்குகின்றது. தென்னாப்பிரிக்காவில் தெற்காசிய நண்பர்கள் என்ற பெயரிலும்,[4] மியான்மரில் சனாதன் தர்ம சுயம்சேவாக் சங்கம் (எஸ்.டி.எஸ்.எஸ்), மொரிசியசில் மொரிசியஸ் சுயம்சேவாக் சங்கம் (எம்.எஸ்.எஸ்), மற்றும் ஐக்கிய அமெரிக்க நாட்டில் இந்து சுயம்சேவாக் சங்கம் (HSS) என்ற பெயரில் இயங்குகின்றது. [5]
இதன் முக்கியக் கொள்கை கலாச்சார தேசியவாதம் எனப்படுகிற முழு மனிதப்பற்றைக் கொண்டு உயிரான, தனித்துவம் மற்றும் நன்னெறிகளைக் கொண்ட பாரம்பரிய இந்தியாவிற்கு புத்துயிர் அளிப்பது தேசத்துக்கு சேவை செய்வதை அன்னை இந்தியாவுக்கு (பாரத மாதா) சேவை செய்வதாகக் கொண்டு இந்தியாவை தன் தாய் நாடாக நினைத்து அதை பாதுகாப்பது.
ஆர்.எஸ்.எஸ் நேரடியாக தேர்தலில் பங்கு கொள்வதில்லை.[6] அதன் கொள்கையை ஒற்றிருக்கும் கட்சிகளுக்கு ஆதரவளிக்கும். அதன்படி பாரதீய ஜனதாக் கட்சி ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவார் அமைப்புடன் அதிகத் தொடர்புடையது.