பிரசந்தா
From Wikipedia, the free encyclopedia
பிரசந்தா (Prachanda, (प्रचण्ड) எனப் பொதுவாக அழைக்கப்படும் புசுப்ப கமல் தகால் (Pushpa Kamal Dahal, நேபாளி: पुष्पकमल दाहाल; பிறப்பு: 11 திசம்பர் 1954) என்பவர் நேபாள அரசியல்வாதியும், தற்போதைய பிரதமரும் ஆவார். இவர் முன்னர் 2008 முதல் 2009 வரையும், மீண்டும் 2016 முதல் 2017 வரையும் நேபாலப் பிரதமராகப் பதவியில் இருந்தார்.
புசுப்ப கமல் தகால் Pushpa Kamal Dahal | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
पुष्पकमल दाहाल | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2016 இல் தகால் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நேப்பாளப் பிரதமர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் உள்ளார் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 26 திசம்பர் 2022 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | வித்யா தேவி பண்டாரி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | செர் பகதூர் தேவ்பா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 4 ஆகத்து 2016 – 7 சூன் 2017 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | வித்யா தேவி பண்டாரி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | கட்க பிரசாத் சர்மா ஒளி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | செர் பகதூர் தேவ்பா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதவியில் 15 ஆகத்து 2008 – 25 மே 2009 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடியரசுத் தலைவர் | ராம் பரன் யாதவ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
Deputy | பாம்தேவ் கௌதம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னையவர் | கிரிஜா பிரசாத் கொய்ராலா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | மாதவ் குமார் நேபாள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட விவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | கணசியாம் தகால் 11 திசம்பர் 1954 (1954-12-11) (அகவை 69) பொக்காரா, நேபாள இராச்சியம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரசியல் கட்சி | நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) (1994–2018; 2021 முதல்) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிற அரசியல் தொடர்புகள் |
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவர் | சீதா பௌடல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | 4 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னாள் கல்லூரி | வேளாண்மை மற்றும் விலங்கு அறிவியல் நிறுவனம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
புனைப்பெயர் | பிரசந்தா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பொக்காராவில் பிறந்த பிரசந்தா, தனது இளமைக் காலத்தைப் பெரும்பாலும் சித்வனில் கழித்தார்.[1] இங்கு ராம்பூர் வேளாண்மை அறிவியல் கழகத்தில் டிப்புளோமா பட்டம் பெற்றார்.[2] இளமையில் இடதுசாரி அரசியல் கட்சிகளில் இணைந்து பணியாற்றினார். 1981 இல், நேபாளப் பொதுவுடமைக் கட்சியில் சேர்ந்தார்.[3] பின்னர் 1989 இல் மாசல் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளரானார். இக்கட்சி பின்னர் நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) எனப் பெயர் மாற்றம் பெற்றது.[4] நாட்டின் உளநாட்டுப் போரின் போது இக்கட்சியின் தலைவராகவும் அக்கட்சியின் இராணுவப் பிரிவான மக்கள் விடுதலை இராணுவத்தின் தலைவராகவும் இருந்தார். இவரது தலைமையின் கீழ் மாவோயிசவாதிகள் 1996 பெப்ரவரி 13 இல் அன்றைய மன்னராட்சியை எதிர்த்து மக்கள் புரட்சியை ஆரம்பித்தனர். இதன்போது கிட்டத்தட்ட 13,000 நேபாளிகள் கொல்லப்பட்டனர்.[5] 2008 தேர்தலில், மாவோயிசக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியதை அடுத்து, பிரசந்தா 2008 ஆகத்து மாதத்தில் பிரதமரானார்.[6] எட்டு இராணுவத் துணைத் தளபதிகளை நீக்க மாவோயிச அரசு எடுத்த முடிவை இராணுவத் தளபதி ரூக்மங்கத் கத்தவால் மதிக்காமல் அவர்களைப் பணி நீடிப்பு செய்தார், அதனால் ஏற்பட்ட மோதலில் இராணுவத் தளபதியை பிரதமர் பிரசந்தா நீக்கினார். ஆனாலும், குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ் ரூக்மங்கத் கத்தவாலை பதவியில் தொடருமாறு கூறியதை அடுத்து பிரசந்தா பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.[7]
காங்கிரசு மற்றும் மாவோயிசப் பொதுவுடமைக் கட்சி ஆகியவற்றின் சுழற்சி முறை அரசாங்கத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தின்படி,[8] பிரசந்தா 2016 இல் இரண்டாவது முறையாகப் பிரதமராக பதவியேற்றார்.[9] 2017 மே 24 இல் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.[10][11] 2022 பொதுத்தேர்தலில், நேபாளப் பொதுவுடைமைக் கட்சி (ஒமாலெ), இராசுத்திரிய சுயதந்திரக் கட்சி, இராசுத்திரீய பிரசாதந்திரக் கட்சி ஆகியவற்றுடனான கூட்டணியில் பிரசந்தா மீண்டும் 2022 திசம்பரில் மூன்றாவது தடவையாகப் பிரதமராகப் பதவியேற்றார்.[12]