வித்யா தேவி பண்டாரி
From Wikipedia, the free encyclopedia
வித்யா தேவி பண்டாரி (நேபாளி: विद्यादेवी भण्डारी; பிறப்பு: 19 ஜூன் 1961) நேபாளத்தின் தற்போதைய குடியரசுத் தலைவராவார். இந்நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக 2015இல் தேர்ந்தெடுக்கப்பட்ட இவரே நேபாளத்தின் முதல் பெண் குடியரசுத் தலைவருமாவார்.[1][2][3] 28 அக்டோபர் 2015 அன்று குடியரசுத் தலைவர் தேர்தலில் வெல்லும் முன்பு இவர் அனைத்து நேபாள பெண்கள் அமைப்பின் தலைவராகவும்,[4] நேபாள பொதுவுடைமைக் கட்சி (ஒன்றிணைந்த மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)-இன் துணைத் தலைவராகவும் இருந்தார்.[5] நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 549க்கு 327 வாக்குகள் பெற்று, குல் பகதூர் குருங்கைத் தோற்கடித்து குடியரசுத் தலைவராகத் தேர்வானார். இதற்கு முன்னர் நேபாள அரசில் பாதுகாப்பு அமைச்சர் பதவியையும் வகித்திருக்கிறார். நேபாளத்தில் இப்பதவியை வகித்த முதல் பெண்மணி இவரே ஆவார்.[6][7][8]
வித்யா தேவி பண்டாரி विद्या देवी भण्डारी | |
---|---|
நேபாளத்தின் இரண்டாவது குடியரசுத் தலைவர் | |
பதவியில் 29 அக்டோபர் 2015 – 13 மார்ச்சு 2023 | |
பிரதமர் | கட்க பிரசாத் சர்மா ஒளி |
Vice President | நந்த கிஷோர் புன் |
முன்னையவர் | ராம் வரண் யாதவ் |
பின்னவர் | ராம் சந்திர பௌதெல் |
பாதுகாப்பு அமைச்சர் | |
பதவியில் 25 மே 2009 – 6 பிப்ரவரி 2011 | |
பிரதமர் | மாதவ் குமார் நேபாள் |
முன்னையவர் | ராம் பகதூர் தாபா |
பின்னவர் | பிஜய குமார் கச்சதார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 19 சூன் 1961 (1961-06-19) (அகவை 62) மானேபஞ்ச்யாங், நேபாளம் |
அரசியல் கட்சி | நேபாள் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) |
துணைவர் | மதன் குமார் பண்டாரி (1982–1993) |
பிள்ளைகள் | இரண்டு |
வித்யாதேவி பண்டாரி இரண்டாவது முறையாக நேபாளக் குடியரசுத் தலைவராக நேபாள நாடாளுமன்றத்தால் 13 மார்ச் 2018 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9]