பளை தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
பளை தொடருந்து நிலையம் (Pallai railway station, பளை புகையிரத நிலையம்) இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் பளை நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது இலங்கை அரசின் ரெயில்வே திணைக்களத்தின் நிருவாகத்தில் இயங்குகின்றது. வடக்குப் பாதையின் ஓர் அங்கமாக உள்ள இந்நிலையம் வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கிறது. பிரபலமான யாழ் தேவி சேவை இந்நிலையத்தினூடாக நடைபெறுகிறது. ஈழப்போரின் போது இத்தொடருந்து நிலையம் ஏனைய வட மாகாணத் தொடருந்து நிலையங்களைப் போன்று சேதமடைந்து 1990 ஆம் ஆண்டு யூலை முதல் இயங்காமல் இருந்தது. 2009 இல் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து கிளிநொச்சி வரையான தொடருந்துப் பாதை சீரமைக்கப்பட்டு 2013 செப்டம்பர் 14 முதல் கொழும்பில் இருந்து வரும் தொடருந்துகள் கிளிநொச்சி வரை பயணம் மேற்கொண்டது.[1] பின்னர் கிளிநொச்சி முதல் பளை வரையான 21 கிமீ நீளப் பாதை புனரமைக்கப்பட்டு 2014 மார்ச் 4 இல் சேவைக்கு விடப்பட்டது.[2]
பளை Pallai | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இலங்கை தொடருந்து நிலையம் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | பளை இலங்கை | ||||||||||
ஆள்கூறுகள் | 9°36′28.80″N 80°19′46.70″E | ||||||||||
உரிமம் | இலங்கை ரெயில்வே | ||||||||||
தடங்கள் | வடக்குப் பாதை | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலை | இயங்குகிறது | ||||||||||
வரலாறு | |||||||||||
மறுநிர்மாணம் | 4 மார்ச் 2014 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
2014 மார்ச் 4 முதல் கொழும்பில் இருந்து வரும் தொடருந்துகள் அனுராதபுரம், வவுனியா ஊடாக பளை வரை சென்றன.[3] பளை ஊடாக யாழ்ப்பாணம் வரையான சேவை 2014 அக்டோபர் 13 முதல் இயங்குகிறது.[4][5] இச்சேவை காங்கேசன்துறை வரை 2015 சனவரி 2 முதல் நீடிக்கப்பட்டது.[6][7]